சாவி மற்றும் பூச்சாடியால் ஏற்பட்ட வாய்தர்க்கத்தால் தந்தை கொல்லப்பட்டார்

சகோதரர்களுக்கு இடையே சாவி மற்றும் பூச்சாடி தொடர்பில் ஏற்பட்ட வாய்தர்க்கத்தை தீர்க்க முயற்சித்த சம்பவத்தில் தந்தை கொல்லப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.


ஹிங்குராங்கொட, கவுடுல்ல, கொலனிய பிரதேசத்தை சேர்ந்த சகோதரர்கள் இடையே இந்த வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

நேற்று (28) மாலை இந்த அசம்பாவிதம் நடைபெற்றதாகவும் கொலை செய்யப்பட்ட நபர் 66 வயதுடையவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த கொலை சம்பவம் தொடர்பில் 40 வயதான மகன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த அசம்பாவிதத்தால் கொலை செய்யப்பட்டவரின் குடும்ப அங்கத்தவர்கள் மூவர் ஹிங்குராக்கொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஹிங்குராக்கொட பொலிஸார் இந்த சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர் ஹிங்குராக்கொட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News  #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines  #Latest Tamil News #India News  #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.