கண்டாவளைவில் வெள்ள இடரால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உதவி

கிளிநொச்சி, கண்டாவளைப் பிரதேச செயலாளர் பிரிவில் வெள்ள இடரால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் நேற்று வழங்கப்பட்டன.


தர்மபுரம் நெத்தலியாறு ஆரம்பப் பாடசாலை மாணவர்கள் 100 பேருக்கும், தர்மபுரம் மத்திய கல்லூரி இடை நிலைப்பிரிவு , உயர்தரப் பிரிவு மாணவர்கள் 120 பேருக்கும் கற்றல் உபகரணப் பொதிகள் வழங்கப்பட்டன.

இலண்டனைத் தலைமையகமாக கொண்டு இயங்கும் வெளிச்சம் குடும்பம் அறக்கட்டளையால் இவை வழங்கப்பட்டன.
#Tamilarul.net #Tamil #News #Tamil News  #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines  #Latest Tamil News #India News  #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.