ஆபத்தான நிலையில் அச்சுவேலி

நீண்ட காலமாக புணரமைப்பு எதுவும்
இன்றி காணப்படும் அச்சுவேலி – தொண்டைமானாறு வீதியை வெள்ளம் முழுமையாக மூடியதால் போக்குவரத்து பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.


குறித்த வீதியின் ஊடான பயணம் செய்பவர்கள் மரண பயத்துடன் பயணிக்க வேண்டிய
கட்டாயத்திற்குள் தள்ளப்பட்டுள்ளனர்.


அண்மையில் குறித்த வீதியால் க.பொ.த சாதாரண தர பரீட்சைக்காக துவிச்சக்கர வண்டியில் சென்ற மாணவி ஒருவர் வெள்ளத்திற்குள் மறைந்திருந்த வீதியின் குழியில் மாட்டி விபத்துக்குள்ளாகியிருந்தார்.


மேலும் வழி இலக்கம் 751,766,767 ஆகிய பயணிகள் பேருந்துக்களும் ஆபத்தான நிலையில் அவ்வீதியுடான பயணத்தினை மேற்கொண்டு வருகின்றது.


எனவே குறித்த விடயம் தொடர்பில் வலி.கிழக்கு பிரதேச சபை துரித நடவடிக்கை எடுத்து, மக்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்துமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  .

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.