672 இடங்களில் டெங்கு அபாயம்!
யாழ்ப்பாணம் மாநகர சபை எல்லைப் பரப்புக்குள் தற்போது நிலவும் டெங்குத் தாக்கத்தை அடுத்து யாழ்ப்பாணம்
பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் நேற்றையதினம் 947 இடங்களில் மேற்கொண்ட சோதனையில் 672 இடங்களில் டெங்குக்கு ஏதுவான சூழலே காணப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்தினர், டெங்குக் கட்டுப்பாட்டுப் பிரிவினர், சுகாதாரத் திணைக்களத்தி னர், பொலிசார், பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரிகள் எனப் பலரும் இணைந்து இந்தச் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்த னர்.
நேற்று ஒரேநாளில் 947 இடங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அவற்றில் 672 இடங்களில் டெங்கு பெருகுவதற்கு ஏதுவான சூழல் இருந்தமை அவதானிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அத்தகைய இடங்களை உடன் துப்புரவு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டது. 25 இடங்களில் நுளம்புக் குடம்பிகள் காணப்பட்டுள்ளன. இதையடுத்து 17 பேருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டது. இந்த நடவடிக்கைகள் இன்றும் தொடரவுள்ளன.
கருத்துகள் இல்லை