கொழும்பில் துப்பாக்கிச் சூடு

கொழும்பு – மட்டக்குளி பிரதேசத்தில்
இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் பெண் ஒருவர் உட்பட ஐவர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் றுவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
இச்சம்பத்தில் படுகாயமடைந்த ஐவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு ஆயுததாரிகளே முச்சக்கரவண்டி ஒன்றின் மீது குறித்த துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுவிட்டு தப்பி சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும், துப்பாக்கிப் பிரயோகத்தினை மேற்கொண்டவர்களை அடையாளம் காணும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.