மட்டக்களப்பு மாநகர சபையின் ஒளிவிழா

மட்டக்களப்பு மாநகர சபையின் ஒளிவிழா நேற்று மாலை மாநகர சபை மண்டபத்தில் நடைபெற்றது.


மட்டக்களப்பு மாநகர சபையின் ஊழியர் நலன்புரிச்சங்கத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. மக்கள் பிரதிநிதிகளினால் சபை அமைக்கப்பட்டு முதலாவது  நிகழ்வாக இந்த ஒளிவிழா இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளர் கே.சித்திரவேல் தலைமையில் நடைபெற்ற இந்த ஒளிவிழாவில் மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

ஆன்மீக அதிதிகளாக புளியடிக்குடா பங்குத்தந்தை அருட்பணி லோ.லோறன்ஸ்,அமிர்தகழி மெதடிஸ்த திருச்சபையினை சேர்ந்த  அருட்சகோதரர் கே.பாஸ்கரன் ஆகியோர் கலந்துகொண்டு நற்செய்தியை வழங்கினர்.

இதன்போது யேசு கிறிஸ்துவின் பிறப்பினை வெளிப்படுத்தும் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றதுடன் பாலன் பிறப்பு நாட்டிய நிகழ்வும் சிறப்பாக நடைபெற்றது.

மேலும் மாநகரசபையின் ஊழியர்களின் பிள்ளைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டதுடன் நிகழ்வுகளில் கலந்துகொண்டவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில் பிரதி முதல்வர் க.சத்தியசீலன்,மாநகரசபை உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News  #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines  #Latest Tamil News #India News  #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.