மஹிந்த UPFA யின் உறுப்பினர் – ஆதாரத்தை சபாநாயகரிடம் வழங்கியது சுதந்திர கட்சி!

முன்னாள் ஜனாதிபதியும் எதிர்க்கட்சி தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் உறுப்பினர் என்பதற்கான ஆதாரத்தை சுதந்திர கட்சி வெளிப்படுத்தியுள்ளது.


அந்தவகையில் அதற்கான ஆதாரத்தை சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் வழங்கியுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் பேராசிரியர் ரோஹண லக்ஸ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.

அத்தோடு மஹிந்த ராஜபக்ஷ சுதந்திர கட்சியில் இருந்தோ அல்லது ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் இருந்தோ விலகவில்லை என நாடாளுமன்றில் சுசில் பிரேமஜயந்த கூறியுள்ளார்.

மேலும் கடந்த மாதம் இலங்கை பொதுஜன பெரமுனவில் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஏனைய உறுப்பினர்கள் உறுப்புரிமையை ஏற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News  #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines  #Latest Tamil News #India News  #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.