புதிய பிரதமராக பதவியேற்கவுள்ள ரணிலுக்கு இராதாகிருஸ்ணன் வாழ்த்து

நாட்டை சிறந்த முறையில் கட்டியெழுப்புவதற்கு நாளை மீண்டும் பிரதமராக பதவியேற்கவுள்ள ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் வே.இராதாகிருஸ்ணன்  தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.


நுவரெலியாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இராதாகிருஸ்ணன் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது,

“ஒரு  தவறு நிகழ்ந்தால் அதில் பாதிக்கப்பட்டவர்  தனது பிரச்சனையை முதலில் கடவுளிடம் முறையிடுவார். பின்னர் நீதித்துறையை நாடுவார். இதன்போது அதற்கான நீதியை  நீதித்துறையிடமிருந்தே விரைவாக எதிர்பார்ப்பது மனிதனின் இயல்பு

அந்தவகையில் இலங்கையில் கடந்த 50 நாட்களாக நடைபெற்ற அரசியல் யுத்தத்திற்கு ஒரு நல்ல தீர்ப்பை நீதிமன்றம் வழங்கியுள்ளது.

மேலும் இந்நாட்டில் நீதிதுறைக்கும் ஜனநாயகத்திற்கும் யாரும் சவால் விட முடியாது என்ற நிலையை நீதிமன்ற தீர்ப்பு உறுதிப்படுத்தியுள்ளது.

இதேவேளை  நாட்டின் புதிய பிரதமராக நாளை தெரிவு செய்யப்படவுள்ள ரணில் விக்ரமசிங்கவுக்கு  மலையக மக்கள் சார்பில்  எனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதுடன் நாட்டின் ஜனநாயகத்தை தொடர்ந்து பாதுகாக்க வேண்டும்” என இராதாகிருஸ்ணன் குறிப்பிட்டுள்ளார்.

#Tamilarul.net #tamil  #Tamilnews #News #Tamil #Srilanka #Jaffna #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.