கிழக்கில் மேலும் பல காணிகள் விடுவிக்கப்படும்

கிழக்கில் படையினர் வசமுள்ள மேலும் பல காணிகளை விடுவிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பார் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.


மக்களின் வேண்டுகோளுக்கமைய ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் மட்டக்களப்பில் நேற்று முன்தினம் காணிகள் விடுவிக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், இது குறித்து நேற்று (வெள்ளிக்கிழமை) கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இது குறித்து மேலும் தெரிவித்த அவர், ”கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக யுத்தத்தால் பாதிக்கப்பட்ட எமது மக்கள் தொடர்ந்தும் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து உள்ளனர். இவ்வாறான பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்ற அடிப்படையில், ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்தோடு இணைந்து இணக்க அரசியல் ஊடாக தீர்க்க முற்பட்டோம். அதன்படி, காணி விடுவிப்பு விடயத்தில் முதற்கட்டமாக தனியார் வாழ்வாதார காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், விடுவிக்கப்படாமல் இருக்கும் எஞ்சிய காணிகளை விடுப்பதற்கான நடவடிக்கையை ஜனாதிபதி எதிவரும் காலங்களில் முன்னெடுப்பார் என நான் நம்புகின்றேன்.

மேலும், நான் ஜானதிபதியோடு இணைந்தது குறித்து பல்வேறு கருத்துக்களை தெரிவிக்கும் அரசியல் தலைமைகள் நான் எனது இனம் சார்ந்த விடயத்தில் இதுவரை சற்றும் பிசகாமல் நிற்கிறேன் என்பதை உணர வேண்டும்.

இந்நாட்டை யார் ஆண்டாலும் என் இனத்தின் இருப்பை பாதுகாக்க நாம் எந்த எல்லைக்கும் செல்லலாம். மற்றைய சமூகங்கள், அவர்கள் சார்ந்த அரசியல் வாதிகள் அதைத்தான் செய்கிறார்கள்” எனத் தெரிவித்தார்.

#Tamilarul.net #Tamil #News #Tamil News  #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines  #Latest Tamil News #India News  #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.