இரசாயன ஆயுதங்களையோ கொத்துக் குண்டுகளையோ நாம் நினைத்தது கூட இல்லை.
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன இவ்வாறு கூறுகின்றாா்.
விடுதலைப் புலிகளுடனான இறுதிப் போரில் கொத்துக் குண்டுகளும், இராசாயன ஆயுதங்களும் பாவிக்கப்பட்டது என்று தமிழர் தரப்பு முன்வைக்கும் குற்றச்சாட்டில் எந்த உண்மையும் இல்லை, அவ்வாறு பாவித்தமைக்கான ஆதாரங்களும் இல்லை.
பன்னாட்டு விசாரணையின் மூலம் இதனை நிருபிக்க வேண்டிய அவசியம் எமக்கில்லை என்று தெரிவித்தார் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன.
இரசாயன ஆயுதங்கள் சமவாய திருத்த சட்டம் மீதான விவாதம் நாடாளுமன்றில் நேற்றுப் புதன்கிழமை இடம்பெற்றபோது, விடுதலைப் புலிகளுடனான இறுதிப் போரில் இலங்கை இராணுவம் இரசாயன ஆயுதங்களையும், கொத்துக் குண்டுகளையும் பாவித்தது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு குற்றம் சுமத்திய நிலையில், அதற்குப் பதிலடியாக இவ்வாறு தெரிவித்தார் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
இலங்கையில் இடம்பெற்ற இறுதிப் போரில் இலங்கை இராணுவம் தமிழ் மக்களுக்கு எதிராக இரசயான ஆயுதங்களையும் கொத்தணிக் குண்டுகளையும் பயன்படுத்தியது என்று குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள போதிலும் அதனை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. அவ்வாறு எமது இராணுவம் மீதான குற்றச்சாட்டுக்களை நாம் கண்டிக்கின்றோம்.
எமது இராணுவம் இரசாயன ஆயுதங்களை பாவித்ததாகவோ அல்லது கொத்துக் குண்டுகளை பாவித்ததாகவோ குற்றச்சாட்டு மட்டுமே முன்வைக்கப்படுகின்றதே தவிர அதற்கான எந்த ஆதாரமும் இல்லை. அதேபோல் இவற்றை நிருபிக்க பன்னாட்டு விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் சபையில் இவர்கள் குறிப்பிட்டனர். பன்னாட்டு விசாரணையை முன்னெடுக்க எந்தத் தேவையும் இல்லை. இலங்கையில் விசாரணைகளை நடத்தி உண்மைகளை நிருபிக்க முடியும். மாறாக பன்னாட்டு விசாரணைக்கு முகங்கொடுத்து எம்மை நிரூபிக்க வேண்டிய எந்தத் தேவையும் இல்லை.
அரசியல் வாதிகள் சிலர் தமது அரசியல் சுயநலன்களுக்காக இவ்வாறான மோசமான கருத்துக்களை முன்வைக்கின்றனர். நாம் ஒன்றாக இணைந்து பயணிக்க வேண்டும் என்ற முயற்சிகளை எடுத்து வருகின்ற நிலையில் ஒரு சிலர் இவ்வாறு பொய்யான கருத்துக்களை முன்வைப்பதன் மூலமாக நாட்டின் ஒற்றுமை சீரழிவதுடன் வேறு பல பிரச்சினைகளும் உருவாகும். ஆகவே இவ்வாறு பொய்யான கருத்துக்களை முன்வைப்பதை தவிர்த்துக்கொள்ள வேண்டும். அண்மையில் வடக்கில் ஏற்பட்ட இடரின் போதும் எமது இராணுவமே வடக்கு மக்களை காப்பாற்றும் நடவடிக்கையை எடுத்தது. ஆனாலும் விக்கினேஸ்வரன் போன்றவர்கள் அதனையும் குறையாகவே கூறுகின்றனர். வடக்கில் இனவாத அடிப்படைவாத கொள்கையில் உள்ள விக்னேஸ்வரன் போன்ற ஒரு சிலரே தவறான கருத்துக்களை கூறுகின்றனர்.
அதேபோல் நாம் பன்னாட்டுச் சமூகத்திடம் அடிபணிந்துள்ளதாக எதிர்க்கட்சி கூறுகின்றது. எமது அரசு பன்னாட்டுத் தரப்புடன் நாடுகளுடன் இணைந்து பயணிக்கும் ஆரோக்கியமான நகர்வுகளை முன்னெடுத்து வருகின்றது. பன்னாட்டுச் சமூகத்துக்கு நாம் அடிபணிந்து செயற்பட வேண்டிய எந்தத் தேவையும் இல்லை. நாம் இலங்கையைப் பாதுகாக்கும் கொள்கையில் இருந்தே செயற்பட்டு வருகின்றோம் – என்றார்.
அட.........நம்ம வெள்ளைவேட்டிக்காரங்கள் கதைச்சிருக்கிறாங்க ...... ஏதோ புரிந்துவிட்டது போல.....
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo
விடுதலைப் புலிகளுடனான இறுதிப் போரில் கொத்துக் குண்டுகளும், இராசாயன ஆயுதங்களும் பாவிக்கப்பட்டது என்று தமிழர் தரப்பு முன்வைக்கும் குற்றச்சாட்டில் எந்த உண்மையும் இல்லை, அவ்வாறு பாவித்தமைக்கான ஆதாரங்களும் இல்லை.
பன்னாட்டு விசாரணையின் மூலம் இதனை நிருபிக்க வேண்டிய அவசியம் எமக்கில்லை என்று தெரிவித்தார் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன.
இரசாயன ஆயுதங்கள் சமவாய திருத்த சட்டம் மீதான விவாதம் நாடாளுமன்றில் நேற்றுப் புதன்கிழமை இடம்பெற்றபோது, விடுதலைப் புலிகளுடனான இறுதிப் போரில் இலங்கை இராணுவம் இரசாயன ஆயுதங்களையும், கொத்துக் குண்டுகளையும் பாவித்தது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு குற்றம் சுமத்திய நிலையில், அதற்குப் பதிலடியாக இவ்வாறு தெரிவித்தார் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
இலங்கையில் இடம்பெற்ற இறுதிப் போரில் இலங்கை இராணுவம் தமிழ் மக்களுக்கு எதிராக இரசயான ஆயுதங்களையும் கொத்தணிக் குண்டுகளையும் பயன்படுத்தியது என்று குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள போதிலும் அதனை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. அவ்வாறு எமது இராணுவம் மீதான குற்றச்சாட்டுக்களை நாம் கண்டிக்கின்றோம்.
எமது இராணுவம் இரசாயன ஆயுதங்களை பாவித்ததாகவோ அல்லது கொத்துக் குண்டுகளை பாவித்ததாகவோ குற்றச்சாட்டு மட்டுமே முன்வைக்கப்படுகின்றதே தவிர அதற்கான எந்த ஆதாரமும் இல்லை. அதேபோல் இவற்றை நிருபிக்க பன்னாட்டு விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் சபையில் இவர்கள் குறிப்பிட்டனர். பன்னாட்டு விசாரணையை முன்னெடுக்க எந்தத் தேவையும் இல்லை. இலங்கையில் விசாரணைகளை நடத்தி உண்மைகளை நிருபிக்க முடியும். மாறாக பன்னாட்டு விசாரணைக்கு முகங்கொடுத்து எம்மை நிரூபிக்க வேண்டிய எந்தத் தேவையும் இல்லை.
அரசியல் வாதிகள் சிலர் தமது அரசியல் சுயநலன்களுக்காக இவ்வாறான மோசமான கருத்துக்களை முன்வைக்கின்றனர். நாம் ஒன்றாக இணைந்து பயணிக்க வேண்டும் என்ற முயற்சிகளை எடுத்து வருகின்ற நிலையில் ஒரு சிலர் இவ்வாறு பொய்யான கருத்துக்களை முன்வைப்பதன் மூலமாக நாட்டின் ஒற்றுமை சீரழிவதுடன் வேறு பல பிரச்சினைகளும் உருவாகும். ஆகவே இவ்வாறு பொய்யான கருத்துக்களை முன்வைப்பதை தவிர்த்துக்கொள்ள வேண்டும். அண்மையில் வடக்கில் ஏற்பட்ட இடரின் போதும் எமது இராணுவமே வடக்கு மக்களை காப்பாற்றும் நடவடிக்கையை எடுத்தது. ஆனாலும் விக்கினேஸ்வரன் போன்றவர்கள் அதனையும் குறையாகவே கூறுகின்றனர். வடக்கில் இனவாத அடிப்படைவாத கொள்கையில் உள்ள விக்னேஸ்வரன் போன்ற ஒரு சிலரே தவறான கருத்துக்களை கூறுகின்றனர்.
அதேபோல் நாம் பன்னாட்டுச் சமூகத்திடம் அடிபணிந்துள்ளதாக எதிர்க்கட்சி கூறுகின்றது. எமது அரசு பன்னாட்டுத் தரப்புடன் நாடுகளுடன் இணைந்து பயணிக்கும் ஆரோக்கியமான நகர்வுகளை முன்னெடுத்து வருகின்றது. பன்னாட்டுச் சமூகத்துக்கு நாம் அடிபணிந்து செயற்பட வேண்டிய எந்தத் தேவையும் இல்லை. நாம் இலங்கையைப் பாதுகாக்கும் கொள்கையில் இருந்தே செயற்பட்டு வருகின்றோம் – என்றார்.
அட.........நம்ம வெள்ளைவேட்டிக்காரங்கள் கதைச்சிருக்கிறாங்க ...... ஏதோ புரிந்துவிட்டது போல.....
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo

.jpeg
)





கருத்துகள் இல்லை