இலங்கைக்கு இமாலய பொருளாதாரச் சிக்கல்! ரணில் ஐயா கூறுகின்றாா்.
இந்த ஆண்டு இலங்கை பெரும் பொருளாதார நெருக் கடியைச் சந்திக்க வேண்டியுள்ளது. 2019ஆம் ஆண்டில் வெளிநாட்டுக் கடன் மற் றும் வட்டியாக 5 ஆயிரத்து 900 பில்லியன் அமெரிக்க டொலர்களையும், இலங்கை வரலாற்றில் பெரும் கடன் தவணையாக ஜனவரி 14ஆம் திகதியில் இருந்து 2 ஆயிரத்து 600 அமெரிக்க டொலர்களையும் செலுத்தியே ஆகவேண்டிய நிர்பந்தம் இலங்கைக்கு உள்ளது என்று தெரிவித்தார் தலைமை அமைச்சர் ரணில்.
நாடாளுமன்றில் நேற்று உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார் அவர்.
நிதி நெருக்கடியை சமாளிக்க இந்திய மத்திய வங்கி 400 மில்லியன் அமெரிக்க டொலர்களையும், சீன பண்டா பிணைமுறி மற்றும் ஜப்பான் சமூராய் பிணைமுறி மூலமாக 500 மில்லியன் அமெரிக்க டொலர்களையும், பன்னாட்டு நாணய நிதியம் மூலம் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களையும் பெற்றுக்கொள்ள எதிர்பார்கின்றோம். அடுத்த வாரம் வொஷிங்டனில் பேச்சுக்களை முன்னெடுக்கவுள்ளோம்.
அரசியல், சமூக பொருளாதார சவால்கள் எம்முன்பாக இருக்கின்றன. 2015ஆம் ஆண்டில் நாம் நாட்டை பொறுப்பேற்கையில் முழு நாடும் பெரிய கடன் பொறியில் சிக்கியிருந்தது. கடன் சுமையில் இருந்து தந்திரோபாயமாக மீள்வதற்கு நாம் நடவடிக்கை எடுத்திருந்தோம். கடன் நெருக்கடியில் எமது நாட்டின் துறைமுகங்கள், வானூர்தி நிலையங்கள் கைப்பற்றப்படும் சூழ்ச்சியில் இருந்து நாம் எம்மை விடுவித்துக்கொண்டோம்.
பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் பொருளாதாரத்தை நிலையான இடத்துக்கு உயர்த்தி வைக்க நடவடிக்கை எடுத்தோம். எனினும் இந்த ஆண்டு பொருளாதார ரீதியில் எமது நாடு பெரியதொரு நெருக்கடியைச் சந்திக்கவேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த வருடத்தில் பொருளாதார துறையில் பெரிய சவால் காத்திருக்கிறது.
அதிக கடன் தொகையையும் இந்த வருடத்தில் செலுத்த வேண்டியுள்ளது. 2019ஆம் ஆண்டில் வெளிநாட்டு கடன் மற்றும் வட்டியாக 5 ஆயிரத்து 900 பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலுத் வேண்டும். இலங்கை வரலாற்றில் பெரிய கடன் தவணையாக ஜனவரி 14ஆம் திகதியில் இருந்து 2 ஆயிரத்து 600 பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலுத்த வேண்டியுள்ளது.
இந்த கடன்கள் எவையும் நாம் பெற்றுகொண்டதல்ல. கடந்த ஆட்சியில் பெறப்பட்ட கடன்களே இவையாகும். கடந்த கால கடன்களை செலுத்தும் போது பொதுமக்களுக்கு சுமை ஏற்படாத வகையில் மீளச் செலுத்துவதற்கான திட்டமொன்றை தயாரித்திருந்தோம்.
உள்நாட்டு பொருளாதாரத்தை மேம்படுத்துதல், ஏற்றுமதி பொருளாதாரத்தைப் பலப்படுத்துதல், வெளிநாட்டு முதலீட்டை அதிகரித்தல் போன்ற திட்டங்களை நாம் செயற்படுத்தியிருந்தோம். கடந்த வருடத்தில் பன்னாட்டுப் பொருளாதாரத்தில் ஏற்பட்ட சில மாற்றங்கள் காரணமாக ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்தது. ரூபாவின் பெறுமதியை பேணுவதற்கான நாம் மூலோபாயங்கள் குறித்தும் கவனம் செலுத்தியிருந்தோம்.
ஆனால் ஒக்டோபர் 26 ஆம் திகதி ஏற்பட்ட அரசியல் குழப்ப நிலை காரணமாக சகல நடவடிக்கைகளும் தடைப்பட்டன. 51 நாள்கள் நீடித்த அரசியல் உறுதியற்ற நிலையால் எமது பொருளாதாரத்தின் மீது பெரும் இடி விழுந்தது. பொருளாதார வளர்ச்சி வீதம் தடைப்பட்டது. ரூபாவின் பெறுமதி மேலும் குறைவடைந்தது. இந்தக் காலப்பகுதியில் எந்த நாட்டிடமிருந்தோ பன்னாட்டு நிதி நிறுவனங்களிடமிருந்தோ கடனோ உதவியோ பெற இலங்கைக்கு முடியவில்லை.
இந்தக் காலப்பகுதியின் அரசின் அபிவிருத்தித் திட்டங்கள், கருத்திட்டங்கள் தடைப்பட்டன. இந்தக் காலப்பகுதியில் பொருளாதாரத்துக்கு ஏற்பட்ட சேதத்தை ஒரேயடியாகக் காண முடியாது. இதனால் நாட்டின் எதிர்கால பொருளாதார வளர்ச்சிக்கு பாதிப்பு ஏற்படும். 51 நாள்களில் இழந்த பொருளாதார அபிவிருத்தியை மீள கட்டியொழுப்புவதற்கு கால அவகாசம் தேவைப்படும். முதலீட்டாளர்களின் நம்பிக்கையை இழக்க நேரிட்டது.
அவர்களின் நம்பிக்கையை மீள கட்டியெழுப்ப வேண்டும். நாட்டில் அரசியல் உறுதி நிலமை காணப்படுவதாக பன்னாட்டுச் சமூகத்திற்கு காண்பிக்க வேண்டும். பன்னாட்டுச் சமூகத்தின் குறிப்பாக முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மீள கட்டியெழுப்ப வேண்டும். இலங்கையின் சுற்றுலாத் துறை உயரிய இடத்தில் இருந்த நேரத்தில்தான் இலங்கையில் அரசியல் நெருக்கடி ஏற்பட்டது.
இதனால் சில நாடுகள் சுற்றுலா துறைக்கு பொருத்தம் இல்லாத நாடாக எமது நாட்டைப் பெயரிட்டனர். சுற்றுலாத் துறையும் பாதிக்கப்பட்டது. பலர் இலங்கைக்கான பயணத்ததை கைவிட்டிருந்தார்கள். 51 நாள்களில் ரூபாவின் பெறுமதி 3.8 வீதத்தினால் வீழ்ச்சியடைந்தது. வெளிநாட்டுக் கையிருப்பு 7 ஆயிரத்து 991.5 மில்லியன் டொலரில் இருந்து 6 ஆயிரத்து 985.4 மில்லியன்களாக வீழ்ச்சியடைந்தது.
ரூபாவின் பெறுமதி குறைவடைந்ததால் நாட்டுக்கு கொண்டுவரும் மூலப்பொருள்களின் விலைகள் உயரும். இதனால் உற்பத்தி செலவும் அதிகரிக்கும். இதனை முகாமைத்துவம் செய்து ஒக்டோபர் 26ஆம் திகதிக்கு முன்பிருந்ததை விட சிறந்த நிலைக்கு நாட்டை மீள உயர்த்துவது எமக்கு பொறுப்பாகும். வாழ்க்கைச் செலவை குறைத்து மக்கள் வாழக்கூடிய வகையிலான சூழலை உருவாக்கவும் இருக்கிறோம்.
எமது நாட்டின் ரூபாவின் விலையை நிலையானதாக மாற்றவே நாம் முயற்சித்து வருகின்றோம். அதற்காக நாடுகள் பலவற்றுடன் நாம் பேச்சு நடத்தி வருகின்றோம். அவற்றில் சில நாடுகள் எமக்கு உதவி செய்ய இணக்கம் தெரிவித்துள்ளன. இந்திய மத்திய வங்கி 400 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை இலங்கை மதிய வங்கிக்கு வழங்க இணக்கம் தெரிவித்துள்ளது.
அதேபோல் மேலும் நிதியை பெற்றுக்கொள்ள இந்தியாவுடன் பேச்சு நடத்தி வருகின்றோம். சீன பண்டா பிணைமுறி மற்றும் ஜப்பான் சமூராய் பிணைமுறி மூலமாக 500 மில்லியன் அமெரிக்க டொலர் பெற்றுக்கொள்ள எதிர்பார்கின்றோம். அதேபோல் பன்னாட்டு நாணய நிதியம் மூலம் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்றுக்கொள்ள எதிர்பார்கின்றோம். ஆகவே வெகு விரைவில் ரூபாவின் விலையை உறுதிப்படுத்தும் நடவடிக்கையை நாம் முன்னெடுக்கவுள்ளோம்.
சுற்றுலா துறையில் துரித வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கான திட்டங்களை செயற்படுத்துவதற்கும் நாம் எதிர்பார்த்திருக்கிறோம். தொழில் பேட்டைகளை முன்னெடுக்கவும் நாம் தீர்மானித்துள்ளோம் – என்றார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #colombo
நாடாளுமன்றில் நேற்று உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார் அவர்.
நிதி நெருக்கடியை சமாளிக்க இந்திய மத்திய வங்கி 400 மில்லியன் அமெரிக்க டொலர்களையும், சீன பண்டா பிணைமுறி மற்றும் ஜப்பான் சமூராய் பிணைமுறி மூலமாக 500 மில்லியன் அமெரிக்க டொலர்களையும், பன்னாட்டு நாணய நிதியம் மூலம் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களையும் பெற்றுக்கொள்ள எதிர்பார்கின்றோம். அடுத்த வாரம் வொஷிங்டனில் பேச்சுக்களை முன்னெடுக்கவுள்ளோம்.
அரசியல், சமூக பொருளாதார சவால்கள் எம்முன்பாக இருக்கின்றன. 2015ஆம் ஆண்டில் நாம் நாட்டை பொறுப்பேற்கையில் முழு நாடும் பெரிய கடன் பொறியில் சிக்கியிருந்தது. கடன் சுமையில் இருந்து தந்திரோபாயமாக மீள்வதற்கு நாம் நடவடிக்கை எடுத்திருந்தோம். கடன் நெருக்கடியில் எமது நாட்டின் துறைமுகங்கள், வானூர்தி நிலையங்கள் கைப்பற்றப்படும் சூழ்ச்சியில் இருந்து நாம் எம்மை விடுவித்துக்கொண்டோம்.
பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் பொருளாதாரத்தை நிலையான இடத்துக்கு உயர்த்தி வைக்க நடவடிக்கை எடுத்தோம். எனினும் இந்த ஆண்டு பொருளாதார ரீதியில் எமது நாடு பெரியதொரு நெருக்கடியைச் சந்திக்கவேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த வருடத்தில் பொருளாதார துறையில் பெரிய சவால் காத்திருக்கிறது.
அதிக கடன் தொகையையும் இந்த வருடத்தில் செலுத்த வேண்டியுள்ளது. 2019ஆம் ஆண்டில் வெளிநாட்டு கடன் மற்றும் வட்டியாக 5 ஆயிரத்து 900 பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலுத் வேண்டும். இலங்கை வரலாற்றில் பெரிய கடன் தவணையாக ஜனவரி 14ஆம் திகதியில் இருந்து 2 ஆயிரத்து 600 பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலுத்த வேண்டியுள்ளது.
இந்த கடன்கள் எவையும் நாம் பெற்றுகொண்டதல்ல. கடந்த ஆட்சியில் பெறப்பட்ட கடன்களே இவையாகும். கடந்த கால கடன்களை செலுத்தும் போது பொதுமக்களுக்கு சுமை ஏற்படாத வகையில் மீளச் செலுத்துவதற்கான திட்டமொன்றை தயாரித்திருந்தோம்.
உள்நாட்டு பொருளாதாரத்தை மேம்படுத்துதல், ஏற்றுமதி பொருளாதாரத்தைப் பலப்படுத்துதல், வெளிநாட்டு முதலீட்டை அதிகரித்தல் போன்ற திட்டங்களை நாம் செயற்படுத்தியிருந்தோம். கடந்த வருடத்தில் பன்னாட்டுப் பொருளாதாரத்தில் ஏற்பட்ட சில மாற்றங்கள் காரணமாக ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்தது. ரூபாவின் பெறுமதியை பேணுவதற்கான நாம் மூலோபாயங்கள் குறித்தும் கவனம் செலுத்தியிருந்தோம்.
ஆனால் ஒக்டோபர் 26 ஆம் திகதி ஏற்பட்ட அரசியல் குழப்ப நிலை காரணமாக சகல நடவடிக்கைகளும் தடைப்பட்டன. 51 நாள்கள் நீடித்த அரசியல் உறுதியற்ற நிலையால் எமது பொருளாதாரத்தின் மீது பெரும் இடி விழுந்தது. பொருளாதார வளர்ச்சி வீதம் தடைப்பட்டது. ரூபாவின் பெறுமதி மேலும் குறைவடைந்தது. இந்தக் காலப்பகுதியில் எந்த நாட்டிடமிருந்தோ பன்னாட்டு நிதி நிறுவனங்களிடமிருந்தோ கடனோ உதவியோ பெற இலங்கைக்கு முடியவில்லை.
இந்தக் காலப்பகுதியின் அரசின் அபிவிருத்தித் திட்டங்கள், கருத்திட்டங்கள் தடைப்பட்டன. இந்தக் காலப்பகுதியில் பொருளாதாரத்துக்கு ஏற்பட்ட சேதத்தை ஒரேயடியாகக் காண முடியாது. இதனால் நாட்டின் எதிர்கால பொருளாதார வளர்ச்சிக்கு பாதிப்பு ஏற்படும். 51 நாள்களில் இழந்த பொருளாதார அபிவிருத்தியை மீள கட்டியொழுப்புவதற்கு கால அவகாசம் தேவைப்படும். முதலீட்டாளர்களின் நம்பிக்கையை இழக்க நேரிட்டது.
அவர்களின் நம்பிக்கையை மீள கட்டியெழுப்ப வேண்டும். நாட்டில் அரசியல் உறுதி நிலமை காணப்படுவதாக பன்னாட்டுச் சமூகத்திற்கு காண்பிக்க வேண்டும். பன்னாட்டுச் சமூகத்தின் குறிப்பாக முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மீள கட்டியெழுப்ப வேண்டும். இலங்கையின் சுற்றுலாத் துறை உயரிய இடத்தில் இருந்த நேரத்தில்தான் இலங்கையில் அரசியல் நெருக்கடி ஏற்பட்டது.
இதனால் சில நாடுகள் சுற்றுலா துறைக்கு பொருத்தம் இல்லாத நாடாக எமது நாட்டைப் பெயரிட்டனர். சுற்றுலாத் துறையும் பாதிக்கப்பட்டது. பலர் இலங்கைக்கான பயணத்ததை கைவிட்டிருந்தார்கள். 51 நாள்களில் ரூபாவின் பெறுமதி 3.8 வீதத்தினால் வீழ்ச்சியடைந்தது. வெளிநாட்டுக் கையிருப்பு 7 ஆயிரத்து 991.5 மில்லியன் டொலரில் இருந்து 6 ஆயிரத்து 985.4 மில்லியன்களாக வீழ்ச்சியடைந்தது.
ரூபாவின் பெறுமதி குறைவடைந்ததால் நாட்டுக்கு கொண்டுவரும் மூலப்பொருள்களின் விலைகள் உயரும். இதனால் உற்பத்தி செலவும் அதிகரிக்கும். இதனை முகாமைத்துவம் செய்து ஒக்டோபர் 26ஆம் திகதிக்கு முன்பிருந்ததை விட சிறந்த நிலைக்கு நாட்டை மீள உயர்த்துவது எமக்கு பொறுப்பாகும். வாழ்க்கைச் செலவை குறைத்து மக்கள் வாழக்கூடிய வகையிலான சூழலை உருவாக்கவும் இருக்கிறோம்.
எமது நாட்டின் ரூபாவின் விலையை நிலையானதாக மாற்றவே நாம் முயற்சித்து வருகின்றோம். அதற்காக நாடுகள் பலவற்றுடன் நாம் பேச்சு நடத்தி வருகின்றோம். அவற்றில் சில நாடுகள் எமக்கு உதவி செய்ய இணக்கம் தெரிவித்துள்ளன. இந்திய மத்திய வங்கி 400 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை இலங்கை மதிய வங்கிக்கு வழங்க இணக்கம் தெரிவித்துள்ளது.
அதேபோல் மேலும் நிதியை பெற்றுக்கொள்ள இந்தியாவுடன் பேச்சு நடத்தி வருகின்றோம். சீன பண்டா பிணைமுறி மற்றும் ஜப்பான் சமூராய் பிணைமுறி மூலமாக 500 மில்லியன் அமெரிக்க டொலர் பெற்றுக்கொள்ள எதிர்பார்கின்றோம். அதேபோல் பன்னாட்டு நாணய நிதியம் மூலம் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்றுக்கொள்ள எதிர்பார்கின்றோம். ஆகவே வெகு விரைவில் ரூபாவின் விலையை உறுதிப்படுத்தும் நடவடிக்கையை நாம் முன்னெடுக்கவுள்ளோம்.
சுற்றுலா துறையில் துரித வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கான திட்டங்களை செயற்படுத்துவதற்கும் நாம் எதிர்பார்த்திருக்கிறோம். தொழில் பேட்டைகளை முன்னெடுக்கவும் நாம் தீர்மானித்துள்ளோம் – என்றார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #colombo
கருத்துகள் இல்லை