போா் குற்ற விசாரணையில் பன்னாட்டின் தலையீடு அவசியம்!!

ஐ.நா. மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படவில்லை. போர்க்குற்றங்களுக்கு பன்னாட்டு நீதிபதிகளை உள்ளடக்கிய விசாரணைகள் இடம்பெறாது என்று அரசின் தலைவர்கள் திரும்பத் திரும்பக் கூறிவருகின்றனர்.


இந்த நிலையில் பன்னாட்டுச் சமூகம், இலங்கை விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பதை நோக்கி நகரவேண்டும். இவ்வாறு புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

ஐ.நா. மனித உரிமைகள் சபை அமர்வுகள் அடுத்த மாத இறுதியில் ஆரம்பமாகவுள்ள நிலையில், அமெரிக்க தமிழ் அரசியல் செயற்பாட்டுக்குழு, பிரிட்டன் தமிழர் பேரவை, ஆஸ்திரேலிய தமிழ்க் காங்கிரஸ் என்பன கூட்டாக இணைந்து இந்த அறிக்கையை விடுத்துள்ளன.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இறுதிப்போர் இடம்பெற்று 10 ஆண்டுகள் நிறைவடையவுள்ளன. போரில் பாதிப்புக்களை எதிர்கொண்டவர்களுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை அருகிச் செல்கின்றது. ஐ.நா. மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றிய தீர்மானத்தைக் கூட இலங்கை அரசு நடைமுறைப்படுத்தவில்லை. அதற்கு நேர் எதிரான கருத்துக்களை அரசின் தலைவர்கள் முன்வைத்து வருகின்றனர்.

2015ஆம் ஆண்டு, குடும்ப ஆட்சியைத் தோற்கடிப்பதில் தமிழ் மக்களின் பங்கு முக்கியமானதாகக் காணப்பட்டது. ஆட்சி மாற்றத்துடன் புதிய அரசு நீதியைப் பெற்றுக் கொடுக்கும் என்று பன்னாட்டுச் சமூகம் எதிர்பார்த்தது. அது நடைபெறவில்லை.

இலங்கை பன்னாட்டுச் சமூகத்துக்கு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றவில்லை. எனவே, அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் சபையின் கூட்டத் தொடரில் இலங்கை விவகாரத்தில் பன்னாட்டுச் சமூகம் அடுத்த கட்டத்தை நோக்கி நகரவேண்டும் – என்றுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.