தவிக்கின்றதே மனதும் !

தலைப்பொங்கல் கொண்டாட
தவமிருக்கிறேன் உனக்காகவே
தாரமாக நீ ஏற்றுவிட்டால்
தனிமையில்லை எனக்கென்றுமே ....

தன்மானம் எனக்குமுண்டு
தலைகுனிய விரும்பவில்லை
தலைக்கனம் என்று சொல்லி
தவிக்க விடலாமா நீயுமென்னை .....
தாவணிக்குள் பூத்த மலர்
தாயகவேண்டும் உன்னாலே
தயங்கி நீயும் நிற்பதனால்
தாங்கி நிற்கின்றேன் சிலுயினையே .....
தாவிக்குதிக்கும் நினைவுகளும்
தாமரை இலையில் நீரானதே
தாகம் தீர்க்கும் மழையெனவே
தாழ்பணிந்து வருவாயோ எனையேற்கவே !
நிவேதா நிவேதிகா.
13 - 01. - 2019.


#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.