பூதன்வயல் கிராம மக்களின் கோரிக்கை!!

முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைதுறைப்பற்றுப் பிரதேச செயலாளர் பிரிவில், மதவளசிங்கன் கிராம அலுவலர் பிரிவிலுள்ள, பூதன்வயல் கிராமத்தில் வீதியொன்று மழை வெள்ளத்தால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.


சுமார் 300மீற்றர் தூரமான, கணுக்கேணிக் குளத்தின் பிரதான பீலி வீதி மிகவும் மோசமாகப் பாதிப்படைந்துள்ளது.

வாகனங்கள் செல்வதில் சிரமம், பாடசாலை மாணவர்கள் சென்று வருவதில் சிரமம் உள்ளிட்ட பல்வேறு இடர்பாடுகளை எதிர்கொள்ள நேரிட்டுள்ளது.

இது தொடர்பில் கிராம அலுவலர் மற்றும் கிராமமட்ட பொது அமைப்புகள் போன்றவற்றிற்குத் தெரியப்படுத்தியிருந்தும், எவரும் இதில் கவனம் செலுத்தவில்லை.

எனவே உரியவர்கள் குறித்த வீதியை மறுசீரமைத்து தருமாறு பூதன்வயல் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.