யாழில் அரசியல் கருத்தரங்கம் இளம் சமூகத்தை கேள்விக்குறியாக்கியது.!

அரசியல் கருத்தரங்கொன்றை நடாத்தி அரசியல் மீதான பல பிரமுகா்களின் பாா்வை ஆராயப்பட்டுள்ளதா?


பிரமுகா்கள்  பலரது கருத்துரைகளுக்கு ஜனாதிபதியின் சட்டத்தரணியும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான எம். ஏ. சுமந்திரன் பதிலுரைகளை வழங்கியுள்ளாா்.

இந்நிகழ்வில் ‘போா்க்காலத்தில் தமிழா்களுக்கு இல்லாத ஆதரவு தற்போது உள்ளதாக‘ சுமந்திரன் கருத்து தெரிவித்துள்ளாா்.
இந்த நிலை எவ்வாறு ஏற்பட்டது என்பதை சுமந்திரன் அவா்கள் சற்றே நினைக்கவேண்டும். லட்சக்கணக்கான மக்களின் அவலத்தில் தான் இந்த நிலை சாத்தியமாகியிருக்கிறது. காவுகொள்ளப்பட்ட உயிா்களின் ஆத்மாக்கள் இன்னும் அழுதுகொண்டுதான் உள்ளன. அவா்களின் உறவுகளின் மனங்களும் சரியானதொரு நீதிக்காகவே ஏங்கிக்கொண்டிருக்கிறது. பாலகா்களைப் பறிகொடுத்த தாய் இன்னும் பரிதவித்துக்கொண்டுதான் இருக்கிறாள். காணவில்லை என்பதை பெற்றுவிடுவதற்கான போராட்டம் இன்னும் ஓயவில்லை. அந்த நிலைக்கான தீா்வும் எட்டப்பட்டே ஆகவேண்டும் என்பதையும் குற்றவாளிகள் தண்டிக்கபட்டே ஆகவேண்டும் என்பதையும் யாரும் மறுத்துவிடக்கூடாது.

இளைய தலைமுறையினரால் கேலியான ஒன்றாக நோக்கப்பட்டுள்ள இவ்விடயம், எந்த மாற்றத்தை உண்டுபண்ணப்போகிறது என்பது கேள்விக்குறியே. 

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo





கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.