முதல் பயணமாக -பிலிப்பைன்ஸ் பயணித்தார் மைத்திரி!!

பிலிப்பைன்ஸ்  நாட்டின் ஜனாதிபதி ரோர்ட்ரிகோ டியுடேர்ட்டின் சிறப்பு அழைப்பின் பேரில் ஐந்து நாள் அரசமுறைப் பயணமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று பிலிப்பைன்ஸூக்குப் பயணித்துள்ளார்.

இரு நாடுகளுக்குமிடையிலான அரசியல், பொருளாதார மற்றும் கலாசார உறவுகளை மேம்படுத்த, புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் இதன்போது கைச்சாத்திடப்படவுள்ளன.

பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரோர்ட்ரிகோ டியுடேர்ட்டுக்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையிலான இருதரப்பு பேச்சு நாளை முற்பகல் இடம்பெறவுள்ளது.

பிலிப்பைன்ஸ்  நாட்டின் மணிலா நகரிலுள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைமையகத்துக்கும், லெஸ்பெனோஸ்கியிலுள்ள சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவனத்துக்கும் ஜனாதிபதி பயணிப்பார். அங்கு ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் தக்கஹிகோ நாகக்காகோவைச் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.

1978ஆம் ஆண்டுக்கு பின்னர் இலங்கையின் அரச தலைவர் ஒருவர் பிலிப்பைன்ஸ்  நாட்டுக்குப் பயணிக்கும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

2019 ஆம் ஆண்டில் ஜனாதிபதியின் முதலாவது வெளிநாட்டுப் பயணம் இதுவாகும்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.