வறுமை தந்த வலியால் மனைவி எடுத்த முடிவு!!

தைப்பொங்கல் பண்டிகைக்கு புத்தாடைகள் வாங்க முடியாத சோகத்தில் ஆழ்ந்திருந்த பெண் சடலமாக மீட்கப்பட்டார்.


ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள முறக்கொட்டாஞ்சேனை கிராமத்திலுள்ள வீடொன்றிலிருந்து பெண்ணின் சடலம் நேற்று மீட்கப்பட்டது.

ஒரு பிள்ளையின் தாயான செல்லத்தம்பி புஸ்பராணி (வயது 26) என்பவரின் சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டது.

2019 ஆங்கிலப் புத்தாண்டுக்கு கடன் அடிப்படையில் புத்தாடைகள் வாங்கினோம். அந்தக் கடன் இன்னமும் தீர்க்கப்படாமலிருக்கும் போது, தைப்பொங்கலுக்கு புத்தாடை வாங்க முடியவில்லை என்று மனைவி சோகத்தில் இருந்தார் என்று கணவர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

பெண்ணின் இறப்புத் தொடர்பான தகவல் வெளியாவில்லை. மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.