அர­ச­மைப்பு உரு­வாக்கல் முயற்­சி­யி­லி­ருந்து பின்­வாங்­க­மாட்­டோம்!

தடை­கள் வரும்­போது அஞ்­ச­மாட்­டோம். அதைத் தகர்த்து அனை­வ­ரி­ன­தும் மன­தை­யும் வெல்­வோம். புதிய அர­ச­மைப்பை உரு­வாக்­கும் பணி­க­ளி­லி­ருந்து நாம் ஒரு­போ­தும் பின்­வாங்­க­ மாட்­டோம்.
நாம் எடுத்த கொள்­கை­யில் உறு­தி­யாக இருக்­கின்­றோம். வதந்­தி­களை நம்­பா­தீர்­கள். இவ்­வாறு தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­ சிங்க தெரி­வித்­தார்.

மகா­நா­யக்க தேரர்­கள் மற்­றும் சிங்­க­ளப் புத்­தி­ஜீ­வி­கள் ஆகி­யோ­ரின் எதிர்ப்­பை­ய­டுத்து புதிய அர­ச­மைப்­பைக் கொண்­டு­வ­ரும் முயற்­சி­யில் இருந்து அரசு பின்­வாங்­கு­கின்­றது என்று இணை­ய­த­ளங்­க­ளில் வெளி­யா­கி­யுள்ள செய்­தி­கள் தொடர்­பில் கருத்­துத் தெரி­விக்­கும்­போதே மேற்­கண்­ட­வாறு கூறி­னார்.

அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

புதிய அர­ச­மைப்­பின் உள்­ள­டக்­கங்­களை நாட்­டி­லுள்ள சகல தரப்­பி­ன­ருக்­கும் நாம் தெளி­வு­ப­டுத்­து­வோம். நாட்­டின் தலை­வி­தியை நிர்­ண­யிக்­கும் இந்­தப் பணி­களை நாம் நினைத்த மாதிரி முன்­னெ­டுக்க முடி­யாது. சகல தரப்­பி­ன­ரி­ன­தும் மன­தை­யும் வென்று புதிய அர­ச­மைப்­பைக் கொண்டு வந்தே தீரு­வோம்.

மூவின மக்­க­ளுக்­கும் நாம் அளித்த வாக்­கு­று­தி­க­ளி­ருந்து பின்­வாங்­க­மாட்­டோம். அவர்­களை நல்­லி­ணக்­கத்­து­டன் சமா­தா­ன­மாக வாழ வைப்­பதே எமது நோக்­கம்.
பிள­வு­ப­டாத நாட்­டுக்­குள் அர்த்­த­முள்ள அதி­கா­ரப் பகிர்வை வழங்­கு­வோம். நாட்­டைப் பிள­வு­ப­டுத்­தும் முயற்­சி­யில் நாம் ஒரு­போ­தும் ஈடு­ப­ட­மாட்­டோம்.

சிறு­பிள்­ளைத்­த­ன­மாக அர­சி­யல் நடத்­து­வோர் எம் மீது அர்த்­த­மற்ற – போலி­யான குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைக்­கின்­ற­னர். நாட்டு மக்­க­ளுக்கு உண்மை நிலை புரி­யும்­போது குழப்­ப­வா­தி­க­ளும் திருந்தி நல்ல வழிக்கு வரு­வார்­கள் – என்­றார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo





கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.