மகிந்தவின் குடும்பத்துக்குள் வலுக்கிறது அதிகார மோதல்!
ராஜபக்ச சகோதரர்களில் மூத்தவரான முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ச, நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
‘மக்கள் தயார் என்றால், அரச தலைவர் தேர்தலில் போட்டியிடத் தயாராக இருப்பதாக கோத்தபாய ராஜபக்ச கூறியுள்ளார். அரச தலைவர் பதவிக்கு நான் பொருத்தமானவர் எனின், நானும் போட்டியிடுவதற்குத் தயாராகவே இருக்கின்றேன்’ என்று சமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரே ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளராக அரச தலைவர் தேர்தலில் போட்டியிடுவார் என்றும், அவர் யார் என்பதை இப்போது வெளியிட முடியாது எனவும் சில நாள்களுக்கு முன்னதாக, சமல் ராஜபக்ச தெரிவித்திருந்தார். இதற்குப் பின்னர், கோத்தபாய ராஜபக்ச, அரச தலைவர் தேர்தலில் போட்டியிடத் தயார் என்று அறிவித்துள்ளதை அடுத்து, சமல் ராஜபக்ச, தானும் தயாராக உள்ளேன் தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #colombo
கருத்துகள் இல்லை