சிறைச்சாலை கைதி வவுனியா வைத்தியசாலையில் மரணம்!

வவுனியா சிறைச்சாலை கைதி ஒருவர் வவுனியா பொதுவைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்த நிலையில்  சிகிச்சை பலனின்றி நேற்றையதினம்  மரணமடைந்துள்ளார்.

இவ் விடயம் பற்றி அறியவருவதாவது,
ஹெரோயின் கடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு  வவுனியா சிறைச்சாலையில் சிறைவாசம் பெற்று வந்த
கொழும்பு மருதானையை சேர்ந்த41 வயதுடைய கேசவன் சசிகுமார் என்ற நபர்  சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையிலேயே குறித்த நபர் சிகிச்சை பலனின்றி வைத்தியசாலையில் இறந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலதிக விசாரணைகளை மரண விசாரணை அதிகாரி மேற்கொண்டு வருகிறார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.