பாதைகளைப் புனரமைக்கும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுப்பு!
மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேசத்தில் அமைந்துள்ள தளவாய்க்காட்டுக்குள் உள்நுளைவதற்கான பாதைகளைப் புனரமைப்புச் செய்யும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
போரதீவுப்பற்று பிரதேச சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இவ்விடயம் தொடர்பான தீர்மானத்திற்கிணங்க இவ்வேலைத்திட்டம் சனிக்கிழமை ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
மட்டக்களப்பு மாநகர சபை, மண்முனை தென் எருவில்பற்று பிரதேச சபை, மண்முனை தென் மேற்கு பிரதேச சபை, மண்முனை மேற்கு பிரதேச சபை மற்றும் போரதீவுப்பற்று பிரதேச சபை ஆகிய சபைகளின் 5 ஜே.சி.பி பெக்கோ இயந்திரங்களைக் கொண்டு இவ்வேவைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
தளவாய்க்காட்டுக்குள் உள்நுளைவதற்காக தூர்ந்துபோய் கிடக்கும் பாதைகள் இதன்போது திறக்கப்படவுள்ளன.
போரதீவுப்பற்றுப் பிரதேசத்தில் தொடர்ந்து காட்டுயானைகளின் தொல்லை அதிகரித்து வருவதாகவும், யானைகள் பகலில் அப்பகுதியில் அமைந்துள்ள தளவாய்க்காட்டிலே தங்கிநின்று, இரவில் வெளியேறி மக்களையும், பயிரினங்களையும் தாக்கி அழித்து வருகின்றதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
அத்தோடு, இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் இப்பாதைகள் திறக்கப்பட்டால் அக்காட்டில் பகல் வேளைகளில் தங்கி நிற்கும் காட்டு யானைகளை துரத்துவதற்கு இலகுவாக அமையும் என அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #colombo
போரதீவுப்பற்று பிரதேச சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இவ்விடயம் தொடர்பான தீர்மானத்திற்கிணங்க இவ்வேலைத்திட்டம் சனிக்கிழமை ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
மட்டக்களப்பு மாநகர சபை, மண்முனை தென் எருவில்பற்று பிரதேச சபை, மண்முனை தென் மேற்கு பிரதேச சபை, மண்முனை மேற்கு பிரதேச சபை மற்றும் போரதீவுப்பற்று பிரதேச சபை ஆகிய சபைகளின் 5 ஜே.சி.பி பெக்கோ இயந்திரங்களைக் கொண்டு இவ்வேவைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
தளவாய்க்காட்டுக்குள் உள்நுளைவதற்காக தூர்ந்துபோய் கிடக்கும் பாதைகள் இதன்போது திறக்கப்படவுள்ளன.
போரதீவுப்பற்றுப் பிரதேசத்தில் தொடர்ந்து காட்டுயானைகளின் தொல்லை அதிகரித்து வருவதாகவும், யானைகள் பகலில் அப்பகுதியில் அமைந்துள்ள தளவாய்க்காட்டிலே தங்கிநின்று, இரவில் வெளியேறி மக்களையும், பயிரினங்களையும் தாக்கி அழித்து வருகின்றதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
அத்தோடு, இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் இப்பாதைகள் திறக்கப்பட்டால் அக்காட்டில் பகல் வேளைகளில் தங்கி நிற்கும் காட்டு யானைகளை துரத்துவதற்கு இலகுவாக அமையும் என அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #colombo
கருத்துகள் இல்லை