மன்னாரில் கழுதைகளின் நடமாட்டத்தால்- மக்கள் அசௌகரியம்!!

மன்னார் பிரதான பாலத்தில் கழுதைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், வாகனங்களில் பயணிப்பவர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாகத் தெரிய வருகின்றது.


மன்னார் பிரதான பாலத்தில் இரவு,பகல் பாராது கழுதைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.தனியாக அல்லது கூட்டமாக கழுதைகள் நடமாடித்திரிகின்றன.

இதனால் மோட்டார் சைக்கிள் மற்றும் ஏனைய வாகனங்களில் மன்னாருக்கு வருபவர்களும், மன்னாரில் இருந்து பிரதான பாலத்தினூடாக வேறு இடங்களுக்கு செல்பவர்களும் அசௌகரியங்களுக்கு உள்ளாகுவதோடு, விபத்துகளுக்கும் முகம் கொடுக்க வேண்டிய நிலமை ஏற்பட்டுள்ளது.

எனவே பிரதான பாலத்தை சுற்றித்திரிகின்ற கழுதைகளை பிடித்து வேறு இடங்களில் விட உரிய அதிகாரிகள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதே வேளை மன்னார் நகர் பகுதியில் மக்களுக்கு இடையூறாக,விபத்துக்களை ஏற்படுத்தும் வகையில் நடமாடிய சுமார் 70 க்கும் மேற்பட்ட கழுதைகள் மன்னார் நகர சபையினரால் பிடிக்கப்பட்டு மாற்று இடம் ஒன்றுக்குக் கொண்டு சென்று விடப்பட்டுள்ளது.

இதனால் மன்னார் நகர் பகுதியில் கழுதைகளின் பிரச்சினைகள் குறைவடைந்துள்ளன.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.