பாடசாலை மைதானத்துக்கு காணி பெற்றுத்தரக் கோரி ஆர்ப்பாட்டம்!

வவுனியா பண்டாரிகுளம் விபுலானந்தா கல்லூரிக்கு மைதானம் ஒன்றைப் பெற்றுத்தருமாறு கோரி பாடசாலைக்கு முன்பாக, பிரதான வீதியை வழி மறித்து இன்று ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

“கடந்த 70 வருடங்களாக பாடசாலைக்கு மைதானம் இல்லை. இதனால் மாணவர்களின் திறமைகள் மழுங்கடிக்கபட்டு வருகின்றது. தொலைவில் உள்ள மைதானத்துக்கு மாணவர்கள் செல்லும் நிலமை ஏற்பட்டுள்ளது.

பாடசாலைக்கு மைதானமொன்றை பெற்றுத்தருமாறு அரசியல்வாதிகள் உட்பட ஜனாதிபதிக்கும் மனு அனுப்பப்பட்டது.

மைதானத்துக்கு காணி கொள்வனவு செய்யும் பொருட்டு பாடசாலைச மூகத்தால் விளையாட்டு மைதான நிதியம் ஒன்று அமைக்கப்பட்டு நிதி சேகரிக்கப்பட்டு வருகிறது. தற்போது வரை 30 இலட்சம் ரூபா நிதி சேகரிக்கப்பட்டுள்ளது. எனினும் பெற்றோர்களின் முழுமையான பங்களிப்புகள் கிடைத்தால் அதிக நிதி கிடைக்க வாய்ப்புள்ளது.“

இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி மைதானத்துக்கு காணியைக் கொள்வனவு செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

பாடசாலை அபிவிருத்திசங்கம், பழையமாணவர்கள், மைதான நிதியம், ஆகியவற்றின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.