ஒரு வருடத்தில் 9 உறுப்பினர்கள் -சபைகளிலிருந்து விலகல்!!
யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிட்டு உறுப்பினர்களாகப் பதவியேற்று ஒரு வருட காலப்பகுதிக்குள்ளேயே 9 பேர் பதவி விலகி யுள்ளனர் என்று தெரிவிக்கப்படு கின்றது.
இறப்பு, கட்சிகள் உறுப்புரிமையில் இருந்து நீக்கியமை, சில உறுப்பினர்களின் நியமனம் தொடர்பாக நீதிமன்ற வழக்குகள் இருக்கின்றமை என்பனவே இதற்குக் காரணங்கள் என்று தெரிவிக்கப் பட்டது.
யாழ்ப்பாணம் மாநகர சபைக்குத் தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பாகத்
தெரிவான சு.விஜயகாந்த் மூன்று கூட்டங்களுக்குச் சமுகமளிக்காததால் அவரது உறுப்புரிமை நீக்கப்பட்டு அவரது இடத்துக்கு வி.நர்மதா உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். நெடுந்தீவுப் பிரதேச சபைக்குத் தமிழ் அரசுக் கட்சி சார்பாகத் தெரிவான ச.லோகேஸ்வரன் இறந்துவிட்டார். அவரது இடத்துக்கு ந.பரமேஸ்வரி நியமிக்கப்பட்டுளளார்.
வல்வெட்டித்துறை நகரசபைக்குத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பாகத் தெரிவான சி.நவகோடி பதவியிலிருந்து தானாக விலகிவிட்டார். அவரது இடத்துக்கு த.சதாசிவம் நியமிக்கப்பட்டுள்ளார்.
வலி.தெற்குப் பிரதேச சபைக்குத் தமிழ் அரசுக் கட்சி சார்பாகத் தெரிவு செய்யப்பட்ட ஜி.பிரகாஷ் அவரது கட்சியின் செயலாளர் கட்சியிலிருந்து நீக்கியிருந்தார். அவரது இடத்துக்கு அ.தவப்பிரகாசம் நியமிக்கப்பட்டுள்ளார். இதே பிரதேச சபைக்குத் தமிழ் அரசுக் கட்சியின் சார்பாகத் தெரிவாகிய இ.குமாரசாமி இறந்துவிட்டார். அவரது இடத்துக்கு இ.கங்காதரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
வலி.கிழக்குப் பிரதேச சபைக்குத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பாகத் தெரிவான ச.பிரதீபன் தானாகப் பதவி விலகினார். அவரது இடத்துக்கு இ.மயில்வாகனம் தெரிவு செய்யப்பட்டுள்ளார். மேற்குறிப்பிட்ட 6 உறுப்பினர்களின் பதவி விலகல் மற்றும் நியம னங்கள் அரசிதழில் பிரசுரிக்கப்பட் டுள்ளன.
மூன்று உள்ளூராட்சி உறுப்பினர்களின் பதவி விலகல் கிடைத்துள் ளன என்றபோதும் அவர்களின் விவரங்கள் அரசிதழில் பிரசுரிக்கப் படவில்லை. இதற்குக் காரணம் சிலரின் வழக்குகள் அண்மையில் முடிவடைந்தமையாலும் சில வழக்குகள் தொடர்ந்து நடைபெறுகி்ன்றமையுமே என்று மேலும் தெரிவிக்கப்பட்டது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #colombo
இறப்பு, கட்சிகள் உறுப்புரிமையில் இருந்து நீக்கியமை, சில உறுப்பினர்களின் நியமனம் தொடர்பாக நீதிமன்ற வழக்குகள் இருக்கின்றமை என்பனவே இதற்குக் காரணங்கள் என்று தெரிவிக்கப் பட்டது.
யாழ்ப்பாணம் மாநகர சபைக்குத் தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பாகத்
தெரிவான சு.விஜயகாந்த் மூன்று கூட்டங்களுக்குச் சமுகமளிக்காததால் அவரது உறுப்புரிமை நீக்கப்பட்டு அவரது இடத்துக்கு வி.நர்மதா உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். நெடுந்தீவுப் பிரதேச சபைக்குத் தமிழ் அரசுக் கட்சி சார்பாகத் தெரிவான ச.லோகேஸ்வரன் இறந்துவிட்டார். அவரது இடத்துக்கு ந.பரமேஸ்வரி நியமிக்கப்பட்டுளளார்.
வல்வெட்டித்துறை நகரசபைக்குத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பாகத் தெரிவான சி.நவகோடி பதவியிலிருந்து தானாக விலகிவிட்டார். அவரது இடத்துக்கு த.சதாசிவம் நியமிக்கப்பட்டுள்ளார்.
வலி.தெற்குப் பிரதேச சபைக்குத் தமிழ் அரசுக் கட்சி சார்பாகத் தெரிவு செய்யப்பட்ட ஜி.பிரகாஷ் அவரது கட்சியின் செயலாளர் கட்சியிலிருந்து நீக்கியிருந்தார். அவரது இடத்துக்கு அ.தவப்பிரகாசம் நியமிக்கப்பட்டுள்ளார். இதே பிரதேச சபைக்குத் தமிழ் அரசுக் கட்சியின் சார்பாகத் தெரிவாகிய இ.குமாரசாமி இறந்துவிட்டார். அவரது இடத்துக்கு இ.கங்காதரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
வலி.கிழக்குப் பிரதேச சபைக்குத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பாகத் தெரிவான ச.பிரதீபன் தானாகப் பதவி விலகினார். அவரது இடத்துக்கு இ.மயில்வாகனம் தெரிவு செய்யப்பட்டுள்ளார். மேற்குறிப்பிட்ட 6 உறுப்பினர்களின் பதவி விலகல் மற்றும் நியம னங்கள் அரசிதழில் பிரசுரிக்கப்பட் டுள்ளன.
மூன்று உள்ளூராட்சி உறுப்பினர்களின் பதவி விலகல் கிடைத்துள் ளன என்றபோதும் அவர்களின் விவரங்கள் அரசிதழில் பிரசுரிக்கப் படவில்லை. இதற்குக் காரணம் சிலரின் வழக்குகள் அண்மையில் முடிவடைந்தமையாலும் சில வழக்குகள் தொடர்ந்து நடைபெறுகி்ன்றமையுமே என்று மேலும் தெரிவிக்கப்பட்டது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #colombo
கருத்துகள் இல்லை