மட்டக்களப்பில் முதியோர்களுக்கு இலவச சத்திரசிகிச்சை!

மட்டக்களப்பு, வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 36 முதியோர்களுக்கு இலவச சத்திரசிகிச்சைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.


இதன்படி, நாளை ( வெள்ளிக்கிழமை) மேற்கொள்ளப்படவுள்ளதாக வாகரை பிரதேச முதியோர் சம்மேளன பொதுச்செயலாளர் ரீ.ஜீ. குருகுலசிங்கம் தெரிவித்தார்.

இவ்வாறு மேற்கொள்ளப்படவுள்ள கண்புரை இலவச சத்திர சிகிச்சைக்கு முதற்கட்டமாக 55 வயதைக் கடந்த 36 பேர் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

வாகரை உதவிப் பிரதேச செயலாளர் அருளானந்தம் அமலினி மற்றும் சமூக சேவைத் திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தர் என். கணலோஜினி ஆகியோரின் முயற்சியில் இலவச சத்திர சிகிச்சை நடைபெறுவதாக முதியோர் சம்மேளன பொதுச்செயலாளர் மேலும் தெரிவித்தார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.