மரக்குற்றிகளுடன் கைது!!

புதுக்குடியிருப்பு மன்னாகண்டல் வீதியில் சட்ட விரோத மரக்குற்றிகளுடன் ஒருவர் நேற்றுக் கைது செய்யப்பட்டுள்ளார்.

மன்னாண்டல் காட்டுப்பகுதியில் இருந்து சட்ட விரோதமான முறையில் மரங்கள் அறுக்கப்பட்டு ஏற்றப்படுவதாக புதுக்குடியிருப்பு பொலிஸாருக்குத் தகவல் கிடைத்தது.

புதுக்குடியிருப்புப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எம்.ஏ.சந்திரபால தலைமையிலான குழுவினர் குறித்த பகுதிக்குச் சென்று சோதனை மேற்கொண்டனர்.

ஒருவர் 10 முதிரை மரக்குற்றிகளை ஏற்றி உழவியந்திரத்தில் ஏற்றிக் கொண்டிருந்த போது கைது செய்யப்பட்டார்.

சட்டவிரோதமான முறையில் வெட்டப்பட்ட ஒரு இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான பத்து முதிரை மரக்குற்றிகளும், அதனை ஏற்றி சென்ற உழவு இயந்திரமும் பறிமுதல் செய்யப்பட்டது.

சாரதி இன்று நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo




கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.