ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய பதவிகளுக்கு செயற்குழு அனுமதி!

ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய பதவிகளுக்கு நியமிக்கப்படவுள்ள உறுப்பினர்களின் பெயர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


நேற்றிரவு (24) நடைபெற்ற கட்சியின் செயற்குழு கூட்டத்திலேயே இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கட்சியின் பிரதி பொதுச்செயலாளராக ருவன் விஜேவர்தனவின் பெயருக்கு அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

கட்சியின் தொழிற்சங்க செயலாளராக பாராளுமன்ற உறுப்பினர் பாலித்த ரங்கே பண்டார நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரதி அமைப்பாளர்களாக அஜித் பெரேரா மற்றும் ஜே.சி. அலவத்துவல ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதனைத் தவிர, ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர்களாக ஜோன் அமரதுங்க, ரஞ்சித் மத்துமபண்டார மற்றும் லக்ஷ்மன் கிரியெல்ல ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களுக்கு செயற்குழுவில் அனுமதி கிடைத்துள்ளதாகவும் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.