மகாத்மாஜீ விளையாட்டுக்கழக அணி வெற்றி!!

யாழ்ப்பாணம் சிவகுரு பொற்பதி விளையாட்டுக்கழக அணியை 2:0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி கிண்ணம் வென்றது திருநெல்வேலி மகாத்மாஜீ விளையாட்டுக்கழக அணி.

நல்லூர் பிரதேச செயலக பிரிவில் பதிவு செய்யபட்ட விளையாட்டுக்கழக்களுக்கு இடையிலான ஆண்களுக்கான கால்பந்தாட்ட தொடரில் இறுதியாட்டம் நேற்று வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு அரியாலை ஜக்கிய விளையாட்டுக்கழக மைதானத்தில் இடம் பெற்றது.

இதில் சிவகுரு பொற்பதி விளையாட்டுக்கழக அணியை எதிர்த்து திருநெல்வேலி மகாத்மாஜீ விளையாட்டுக்கழக அணி மோதியது.

முதற் பாதி ஆட்டத்தின் போது இரண்டு அணியினரும் எது வித கோல்களை பதிவு செய்யத நிலையில் முதற் பாதி ஆட்டம் முடிவுக்கு வந்தது.

இரண்டாம் பாதிஆட்டத்தின் 17 ஆவது நிமிடத்தில் திருநெல்வேலி மகாத்மாஜீ விளையாட்டுக்கழக அணி முதலாவது கோலினை பதிவு செய்யதார் கரிகரன்.

இரண்டாவது கோலினை கிருசாந் ஆட்டத்தின் 27 நிமிடத்தில் பதிவு செய்தார்.

ஆட்ட நிறைவில் 2:0 என்ற கோல் கணக்கில் திருநெல்வேலி மகாத்மாஜீ விளையாட்டுக்கழக அணி வெற்றி பெற்றது.
 #Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo




கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.