சர்வதேச இந்துஇளைஞர் பேரவையின் ஏற்பாட்டில் அ.த.க பாடசாலை மாணவர்களுக்கு உதவி!

இன்றைய தினம் 26.01.2019 சர்வதேச இந்துஇளைஞர் பேரவையின் ஏற்பாட்டில்  மு தேறாங்கண்டல் அ.த.க பாடசாலையில் கல்வி பயிலும் அனைத்து  மாணவர்களுக்கு 228 பேருக்கும் காலணிகள் வழங்கி வைக்கப்பட்டது.


இந்த காலணிகளுக்கான நிதி அனுசரணையினை லண்டன் கற்பகபதி கற்பக விநாயகர் ஆலய நிர்வாகத்தினரும்..
லண்டன் உயர்வாசற்குன்று முருகன் ஆலய நிர்வாகமும்  சர்வதேச இந்து இளைஞர் பேரவையினர் ஊடாக வழங்கியிருந்தனர்.

இந்த நிகழ்வு இன்றைய தினம் முப 11 மணியளவில் பாடசாலை முதல்வர் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் சர்வதேச இந்து இளைஞர் பேரவையின் இலங்கை கிளையின் தலைவர் வணக்கத்திற்குரிய மயூரக்குருக்கள் அவர்களும் இலங்கைக்கான ஒருங்கிணைப்பாளர் திரு சிவ கஜேந்திரகுமார்  முல்லை மாவட்ட சமூக செயற்பாட்டாளர் திலகநாதன் கிந்துஜன்  பாடசாலை அதிபர் ஆசிரியர்கள்  என  பலரும் கலந்து சிறப்பித்து மாணவர்களுக்கான காலணிகளை வழங்கி வைத்தனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.