மலையகத்தில் சத்தியாக்கிரகம்!

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் சம்பள உயர்வை வழங்கக்கோரி, டிக்கோயாவில் சத்தியாக்கிரக போராட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.



டிக்கோயா சலங்கந்தை பகுதியை சேர்ந்த சிவனு கணேசன் என்பவர் இன்று (சனிக்கிழமை) ஹற்றன் மல்லியப்பு சந்தியில் இப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த அடிப்படைச் சம்பளத்தை  1000 ரூபாயாக அதிகரிக்கவேண்டுமென நாடாளாவிய ரீதியில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

எனினும், தொழில் அமைச்சில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில், பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளொன்றுக்கான அடிப்படை சம்பளம் 700 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டது.

இந்நிலையில், 1000 ரூபாய் அடிப்படைச் சம்பளத்தை வழங்கவேண்டுமென வலியுறுத்தி இந்த சத்தியாக்கிரக போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

1000 ரூபாய் அடிப்படைச் சம்பளம் அற்ற கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட மாட்டோம் என தொழிற்சங்கங்கள் குறிப்பிட்டிருந்தன. எனினும், நாளை கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.