தமிழகத்தை காப்பாற்ற எந்த தலைவராலும் முடியாது!

தமிழகத்தை காப்பாற்ற எந்த தலைவராலும் முடியாது எனவும்  மக்களால்தான் மீட்டெடுக்க முடியும் என்றும்  மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.



கடலூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், "அரசியல் என்பது தீண்டதகாதது அல்ல, அதை சுத்தப்படுத்த வேண்டும் அரசியலில் இழந்த மாண்புகளை மீட்டெடுக்க வேண்டிய அவசியம் உள்ளது. தமிழகத்தை காப்பாற்ற எந்த தலைவராலும் முடியாது மக்களால்தான் முடியும். தமிழகத்தை அவலநிலையில் இருந்து மக்கள் தான் மீட்டெடுக்க வேண்டும்.

மக்கள் என்னை போன்றே பதற்றத்திலும், மாற்றம் வேண்டும் என்ற ஆர்வத்திலும் உள்ளனர். திராவிடம் நாடு தழுவியது அதை புரிந்து கொண்டால் தேசிய நீரோட்டத்துடன் இணையலாம். தமிழகத்தில் கறுப்புக்கொடி காண்பித்தது ஏன் என்பதை பிரதமர் மோடி கவனிக்க வேண்டும்" என தெரிவித்தார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.