ஜனாதிபதி வேட்பாளர் தயார்!!
மொட்டுச் சின்னத்தின் ஜனாதிபதி வேட்பாளர் தயாராகிவிட்டதாக மஹிந்த ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர், லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் யார் என்பது தொடர்பிலேயே தற்போது அதிகமாக பேசப்படுகின்றது.
இந்நிலையில், எமது வேட்பாளரின் குடியுரிமைப் பிரச்சினைகள் எல்லாம் தீர்க்கப்பட்டுள்ளன. இந்த அரசாங்கம் ஆட்சி பீடத்தில் ஏறிய காலத்தில், மஹிந்த ராஜபக்ஷ மக்களை சந்தித்து கலந்துரையாடினார்.
பஷில் ராஜபக்ஷ தான் இவற்றையெல்லாம் ஒருங்கிணைந்து வழிநடத்திச் சென்றார். அந்தவகையில், இந்த அரசியல் போராட்டத்திற்கு உரிய தரப்பினர் உரிய நேரத்தில் களமிறங்குவர்.
எம்மிடமுள்ள சில பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுள்ளன. ஐக்கிய தேசியக் கட்சிக்கு எமது வேட்பாளர் தொடர்பில் அச்சம் ஏற்பட்டுள்ளது.
வெளிநாட்டுக் குடியுரிமை இருப்பதால் கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் பஷில் ராஜபக்ஷவுக்கும் போட்டியிட முடியாது என்று கூறுகிறார்கள். இவ்வாறு எமது வேட்பாளர் குறித்தே அதிக கேள்விகள் எழுந்துள்ளன.
எனினும், எமது தரப்பின் குடியுரிமைப் பிரச்சினையும், வேட்பாளர் பிரச்சினையும் தற்போது தீர்க்கப்பட்டுவிட்டது. யார் வேட்பாளர் என்று இப்போதே எம்மால் கூறமுடியாது. யார் சரியான நபரோ, அவர் உரிய நேரத்தில் களமிறங்குவார்” என லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன மேலும் குறிப்பிட்டுள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #colombo
கொழும்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் யார் என்பது தொடர்பிலேயே தற்போது அதிகமாக பேசப்படுகின்றது.
இந்நிலையில், எமது வேட்பாளரின் குடியுரிமைப் பிரச்சினைகள் எல்லாம் தீர்க்கப்பட்டுள்ளன. இந்த அரசாங்கம் ஆட்சி பீடத்தில் ஏறிய காலத்தில், மஹிந்த ராஜபக்ஷ மக்களை சந்தித்து கலந்துரையாடினார்.
பஷில் ராஜபக்ஷ தான் இவற்றையெல்லாம் ஒருங்கிணைந்து வழிநடத்திச் சென்றார். அந்தவகையில், இந்த அரசியல் போராட்டத்திற்கு உரிய தரப்பினர் உரிய நேரத்தில் களமிறங்குவர்.
எம்மிடமுள்ள சில பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுள்ளன. ஐக்கிய தேசியக் கட்சிக்கு எமது வேட்பாளர் தொடர்பில் அச்சம் ஏற்பட்டுள்ளது.
வெளிநாட்டுக் குடியுரிமை இருப்பதால் கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் பஷில் ராஜபக்ஷவுக்கும் போட்டியிட முடியாது என்று கூறுகிறார்கள். இவ்வாறு எமது வேட்பாளர் குறித்தே அதிக கேள்விகள் எழுந்துள்ளன.
எனினும், எமது தரப்பின் குடியுரிமைப் பிரச்சினையும், வேட்பாளர் பிரச்சினையும் தற்போது தீர்க்கப்பட்டுவிட்டது. யார் வேட்பாளர் என்று இப்போதே எம்மால் கூறமுடியாது. யார் சரியான நபரோ, அவர் உரிய நேரத்தில் களமிறங்குவார்” என லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன மேலும் குறிப்பிட்டுள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #colombo

.jpeg
)





கருத்துகள் இல்லை