வெடித்தது போராட்டம்!! மக்களும் நகரசபையினரும் !!

பம்பைமடு குப்பைமேட்டால் வெடித்தது போராட்டம், சாளம்பைக்குளத்தில் மக்களும் ஏ9 வீதியில் நகரசபையினரும் போராட்டம்.

வவுனியா பிரதேசத்தின் கழிவுகள் பம்மைமடுவில் கொட்டபடுகின்றமையால் தமது கிராமம் பல்வேறுபாதிப்புகளை சந்திப்பதாக தெரிவித்து சாளம்பைகுளத்தில் வசிக்கும் இஸ்லாமிய மக்கள் ஆர்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். இதன் காரணமாக குப்பைகளை கொட்ட முடியாமையினால் நகரசபை குப்பை ஏற்றிய வாகனங்கள் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக ஏ9 வீதியை வழிமறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இன்று காலை 7 மணியளவில் குப்பை மேட்டிற்கு செல்லும் பிரதான வாயிலைமறித்த பொதுமக்கள் அவ்விடத்தில்  தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
புதிய சாளம்பைக்குளம் கிராமம் குடியேற்றம் செய்யப்படுவதற்கு முன்பாக இருந்தே குறித்த பகுதியில் குப்பைகள் கொட்டப்பட்டு வரும் நிலையில் அப்பகுதியில் குடியேற்றம் செய்யப்பட்டிருந்த நிலையில் அப்பகுதியில் வாழ்ந்த மக்கள் தாம் அப்பகுதியில் தற்போது வாழ்ந்து வருவதனால் குப்பை கொட்டும் செயற்பாட்டை வேறு இடத்திற்கு அகற்ற வேண்டும் என தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வந்திருந்தனர்.
இந் நிலையில் அரச மட்ட அதிகாரிகளினால் இதற்கான சாதகமான நிலைப்பாடுகளுக்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வந்திருந்த  நிலையில் தொடர்ச்சியாக பம்பைமடுவில் குப்பைகள் கொட்டப்பட்டு வந்தது.
இதன்போது கருத்து தெரிவித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள்
நீண்காலமாக இப்பகுதியில் கழிவுகள் கொட்டபடுகின்றது இதனால் எமது கிராமத்தில் வசிக்கமுடியாத நிலை காணப்படுகின்றது. துர்நாற்றம் வீசிவருவதுடன் இலையான்கள் கொசுக்களின் தொல்லைகள் அதிகமாக காணப்படுகின்றது.
எனவே குறித்த குப்பைமேடு அகற்றபடாவிடில் போராட்டத்தை நிறுத்தமாட்டோம் எனதெரிவித்ததுடன் குப்பைகளை ஏற்றிவந்த உழவியந்திரங்களையும் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை.
சம்பவ இடத்திற்கு மாவட்ட மேலதிக அரசஅதிபர் தி.திரேஸ்குமார் மற்றும் உதவி பிரதேச செயலாளர் ஆகியோர் விஜயம் செய்திருந்ததுடன் விடயம் தொடர்பாக ஆர்ப்பாட்ட காரர்களுடன் பேசியிருந்தார். குறித்த குப்பைமேட்டை அகற்றுவது தொடர்பாக இன்று மாலை அனைத்து தரப்புகளையும் உள்ளடக்கிய வகையில் கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளது. அதில் சரியான தீர்வு ஒன்று வழங்கபடும் எனவே போராட்டத்தை கைவிடுமாறு கேரியிருந்தார். இதற்கு எதிர்புதெரிவித்த ஆர்பாட்டகாரர்கள் நீங்கள் கலந்துரையாடலை முடித்துவிட்டு நாம் ஆர்பாட்டத்தில் ஈடுபடும் பகுதிக்கு வருகைதந்து  முடிவை கூறுமாறும் நாம் எதிர்பார்த்த தீர்வு கிடைத்தால் போராட்டத்தை கைவிடுவதாகவும் தெரிவித்தனர்.
குறித்த போராட்டம் காரணமாக மாவட்டத்தின் கழிவகற்றல் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து. மாவட்டத்தின் கழிவுகளை  அகற்றும் வாகனங்கள் அதனை  கொட்டமுடியாமல் திரும்பிசென்றதுடன், வவுனியா மாவட்டசெயலகத்திற்கு முன்பாக  அனைத்து வாகனங்களையும்’ நிறுத்திவைத்துள்ளதுடன், நகரசபை தவிசாளர், பிரதேசசபை தலைவர், உறுப்பினர்கள்  அரசஅதிபருடன் கலந்துரையாடலை மேற்கொண்டிருந்தனர்.
நகரசபையின் வாகனங்கள் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக ஏ9 வீதியில் நிறுத்தப்பட்டிருந்தது. இதேவேளை கருத்து தெரிவித்த வவுனியா பிரதேச சபை தலைவர் குறித்த குப்பை மேடு நீண்ட காலமாக உள்ளது. அதனை தெரிந்தே இப்பகுதியில் அரசியல் செல்வாக்கால் வீடுகளை அமைத்திருந்தனர். அவை சட்ட விரோதமான வீடுகள். அதற்காக குப்பை மேட்டை அகற்ற முடியாது. வேறு இடங்கள் இல்லை. திடீரென குப்பைகளை கொட்டவேண்டாம் என தெரிவித்தால் என்ன செய்வது. என தெரிவித்தார். இதேவேளை குப்பைகளை கொட்டுவதற்கு இடையூறாக வீதியை மறிப்பவர்களுக்கு எதிராக வவுனியா நகரசபை தலைவர் மற்றும் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை தலைவர் பூவரசன்குளம் பொலிஸில் முறைப்பாட்டை பதிவு செய்திருந்தனர்.
இந் நிலையில் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக  நிறுத்தப்பட்டிருந்த குப்பை வாகனங்கள் ஏ9 வீதியை மறித்து நிறுத்திய நகரசபை ஊழியர்கள் குப்பைகளை கொட்டுவதற்கு அனுமதிக்க வேண்டுமென தெரிவித்தனர்.இதன் காரணமாக
வாகன போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதுடன் வாகனங்கள் வவுனியா பொது வைத்தியசாலைக்கு பின்புறமாகவும் மன்னார் விதியூடாகவும் போக்குவரத்தை மேற்கொள்ள பொலிஸார் ஆவண செய்திருந்தனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.