மனித உரிமை செயற்பாட்டாளருக்கு சீனாவில் 4 ஆண்டுகள் சிறை

சீனாவில் மனித உரிமை செயல்பாட்டாளரான சட்டத்தரணிக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவில் கம்யூனிஸ்ட் ஆட்சிக்கு எதிராக கருத்து தெரிவித்த பலரை அந்நாட்டு அரசாங்கம் கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் கைது செய்து சிறையிலடைத்தது. அவர்கள்மீது ஆட்சியை கவிழ்க்க சதிச்செயலில் ஈடுபட்டது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன.

இவ்வாறு சீனாவின் வடகிழக்கு பகுதியிலுள்ள துறைமுக நகரமான டியான்ஜின் பகுதியில் கைதான மனித உரிமை செயற்பாட்டாளரும் சட்டத்தரணியுமான வாங் குவாங்ஸாங் கடந்த மூன்றரை ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அவரை விடுதலை செய்யகோரி வாங் குவாங்ஸாங்-கின் மனைவி சமூகவலைத்தளம் ஊடாக பிரச்சாரங்களை முன்னெடுத்து வந்தார்.

சீனத்தலைநகர் பீஜிங்கிலிருந்து மொட்டை தலையுடன் தனது கணவர் சிறை வைக்கப்பட்டிருந்த டியான்ஜின் நகருக்கு பேரணியாக சென்றார். எனினும், அவரது கோரிக்கைகள் அரசாங்கத்தினால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

இந்நிலையில், டியான்ஜின் நகர இரண்டாவது நீதிமன்றத்தில் வாங் குவாங்ஸாங் மீது தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு நான்காண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

மேலும், தண்டனைக்காலம் முடிந்து அடுத்த ஐந்தாண்டுகள்வரை அவர் தேர்தல்களில் வாக்களிக்கவும், போட்டியிடவும், பொது மேடைகளில் பேசவும், எழுதவும், அரசுப்பணிகளில் சேரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த தண்டனைக்கு சீனாவிலுள்ள மனித உரிமை ஆர்வலர்கள் பலரும் கண்டனம் வெளியிட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.