திருவாரூர் இடைத்தேர்தல்; திமுக வேட்பாளருக்கு ஆதரவளித்த மதிமுக!

திமுக தலைவர் கருணாநிதி மறைவை ஒட்டி, திருவாரூர் தொகுதி காலியானது. இதையடுத்து வரும் 28ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதன் வாக்கு எண்ணிக்கை 31ஆம் தேதி நடைபெற உள்ளது.


இந்த தொகுதியில் வழக்கமாக திமுக பெரும்பான்மை பெற்று வருவதால், மீண்டும் அதே கட்சி கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் திருவாரூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளருக்கு மதிமுக ஆதரவு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, திருவாரூர் இடைத்தேர்தலில் திமுக வெற்றிக்காக மதிமுக பாடுபடும். கடந்த நாடாளுமன்ற தேர்தலைப் போல், தற்போதும் திமுக கூட்டணி வெற்றி பெறும்.

தமிழக சட்டமன்றம் நாளை கூடுகிறது. இதில் ஸ்டெர்லைட் குறித்து கொள்கை முடிவு எடுக்க வேண்டும். பிரதமர் வேட்பாளராக ராகுலை மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தது சரிதான். பிரதமர் மோடி தமிழகம் வந்தால் கறுப்புக் கொடி காட்டப்படும்.

ஜெயலலிதா மரண விவகாரத்தில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனுக்கு எதிராக புகார் கூறப்படுவது நியாயம் இல்லை. இவர் தமிழகத்தில் நேர்மறையான அதிகாரிகளில் முக்கியமானவர் என்று தெரிவித்தார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News  #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines  #Latest Tamil News #India News  #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.