பிரபல ஐடி நிறுவனத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

பிரபல ஐடி நிறுவனம் ஒன்றிற்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது அந்நிறுவன நிர்வாகத்தினரிடையே  அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


சோழிங்கநல்லூரில் செயல்படும் எல்காட் செஸ் (ELCOT SEZ) என்ற ஐடி நிறுவனத்திற்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. அந்த இமெயிலில், 'நாங்கள் உங்களது நிறுவனத்தை கண்காணித்து கொண்டிருக்கிறோம். இன்னும் 7 மணி நேரத்தில் நாங்கள் வைத்த குண்டு வெடிக்கும். நாங்கள் நிறைய நிறுவனங்களில் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அதில் ஐஎஸ் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இது ஐ.எஸ் தீவிரவாதிகளின் செயலாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து காவல்துறையினர் தங்களது விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.