தை பிறந்தேனும் வழி பிறக்குமா?
வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்துக்கு முன்பாக சுழற்சி முறையிலான உணவு ஒறுப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களே இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.
‘நாம் எமது பிள்ளைகளைத்தேடி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றோம். இலங்கை அரசியல்வாதிகள் அனைவருமே எங்களைக் கைவிட்டுவிட்டார்கள். நாம் பன்னாட்டுச் சமூகத்தையே நம்பியுள்ளோம். பிறந்துள்ள புதிய ஆண்டிலாவது பன்னாட்டுச் சமூகம் எம் மீது கரிசனை செலுத்தி எங்கள் கண்ணீருக்குத் தீர்வு காணவேண்டும்’ என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அவர்களது போராட்டம் இன்றுடன் 680 நாள்களை எட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo
கருத்துகள் இல்லை