சசிகுமார் இயக்கத்தில் சூர்யா?

சுப்பிரமணியபுரம் என்ற வெற்றிப்படத்தைக் கொடுத்த சசிகுமார் அதன்பின் ஈசன் படத்தை இயக்கினார். 2010ஆம் ஆண்டுக்குப் பின் அவரது இயக்கத்தில் வேறெந்தப் படமும் வெளியாகவில்லை. நடிப்பிலும், தயாரிப்பிலும் கவனம்
செலுத்தி வரும் அவர் எப்போது அடுத்தப் படத்தை இயக்குவார் என்ற எதிர்பார்ப்பு திரைத்துறையிலும் ரசிகர்கள் மத்தியிலும் நிலவி வருகிறது.

அவ்வப்போது சசிகுமார் இயக்குவதாகத் தகவல்கள் பரவுவதும் பின் அவரது தரப்பு மறுப்பதும் நடந்துவருகிறது. தற்போது சூர்யாவை கதாநாயகனாகக் கொண்டு அவர் புதிய படத்தை இயக்கவுள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் கூறப்படுகிறது. சூர்யாவிடம் சசிகுமார் கூறிய கதை அவருக்குப் பிடித்துப்போக உடனே சம்மதித்துள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் என்ஜிகே, கேவி.ஆனந்த் இயக்கத்தில் காப்பான் ஆகிய படங்களில் நடித்துவருகிறார். அந்தப் படங்களை முடித்தபின் சசிகுமார் இயக்கத்தில் அவர் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக சசிகுமார் தரப்பிலிருந்து நடிகர் விஜய்க்கு ஒரு கதைக் கூறப்பட்டு அவர் நடிக்க மறுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சசிகுமார் நடித்துள்ள பேட்ட திரைப்படம் ஜனவரி 10ஆம் தேதி வெளியாக உள்ளது. தனுஷ் நடித்துள்ள எனை நோக்கி பாயும் தோட்டா படத்திலும் அவர் நடித்துள்ளார். இவை தவிர நாடோடிகள் 2, கொம்பு வச்ச சிங்கம் டா, கென்னடி கிளப் ஆகிய படங்கள் அவர் கைவசம் உள்ளன. எனவே அவர் நடிப்பில் இந்த ஆண்டு பல படங்கள் வெளியாக உள்ளன.
#Tamilarul.net #Tamil #News #Tamil News  #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines  #Latest Tamil News #India News  #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.