உணவு ஒறுப்புப் போராட்டத்தில் தமிழ் அரசியல் கைதி ஒருவர் .
அநுராதபுரம் சிறைச்சாலை யில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதி யொருவர் நேற்று முதல் உணவு ஒறுப்புப் போராட்டத்தை ஆரம்பித்துள் ளார்.
வழக்குகளைத் துரிதப்படுத் தும்படி வலியுறுத்தியே, உணவு ஒறுப்புப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.
கிளிநொச்சி வட்டக்கச்சியை சேர்ந்த சிவப்பிரகாசம் சிவசீலன் என்ற அரசியல் கைதியே போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். தனது கோரிக்கை கடிதத்தை அநுராதபுரம் சிறைச்சாலை பொறுப்பதிகாரி மூலம், சிறைச்சாலை ஆணையாளருக்கு அனுப்பி வைத்துள்ளார்.
இவரது தந்தையார் கடந்த சில தினங்களின் முன்னர் காலமாகியிருந்தார். அதற்காக சில மணித்தியாலங்களே அவருக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்தது.
கருத்துகள் இல்லை