புலம்பெயர் தமிழர்களின் ஒத்துழைப்பு பொருளாதார வளர்ச்சிக்கு அவசியம்!

நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு புலம்பெயர் முதலீட்டாளர்களின் ஒத்துழைப்பு அவசியம் என, வர்த்தக மற்றும் கைத்தொழில் பிரதியமைச்சர் புத்திக பத்திரன தெரிவித்துள்ளார்.
வட. மாகாண தொழில் முயற்சியாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை கண்டறியும் வகையிலான சந்திப்பு இன்று (புதன்கிழமை) யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
குறித்த சந்திப்பில் பிரதம அதிதியாக கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே பிரதியமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”இலங்கையில் கைத்தொழில், வர்த்தக துறை சார்ந்த கட்டமைப்பினை ஒப்பிட்டு பார்க்கின்றபோது 86 வீதமான வளர்ச்சி வீதம் காணப்படுகின்றது. எனவே இந்த வளர்ச்சி அதிகரிக்கப்பட வேண்டும்.
எனவே அவ்வாறான ஊக்குவிப்பு என்பது ஏனைய மாகாணங்களில் இருந்தும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற முன்மொழிவுக்கு ஐனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர்கள் முழு அளவிலான பங்களிப்பினை வழங்கியுள்ளனர்.
குறிப்பாக நாட்டின் பொருளாதார வளர்ச்சியை உயர்த்துவதற்கு நாம் எதிர்பார்க்கின்றோம். அவ்வாறான வலுவான கட்டமைப்பிற்காக புலம்பெயர்ந்த முதலீட்டாளர்கள் ஊக்குவிப்பினையும் ஒத்துழைப்பினையும் வழங்க முன்வரவேண்டும்.
வட. மாகாணத்திலுள்ள தொழிற்சாலைகள் இன்னும் பல இடர்நிலையில் காணப்படுகின்றமை வேதனையளிக்கிறது. அவற்றினை மீண்டும் மக்களிடம் கையளிக்க எதிர்பார்க்கின்றோம்” எனத் தெரிவித்தார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Hea
dlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.