அம்பியூலன்ஸ் வண்டிகள் கையளிப்பு!

சுகாதார மற்றும் சுதேச அமைச்சினால் வடமாகாணத்தில் பின்தங்கிய நிலையில் இருந்த சுகாதார சேவை வைத்தியசாலைகளுக்காக, 17 அம்பியூலன்ஸ் வண்டிகள் கையளிக்கப்பட்டுள்ளன.


குறித்த நிகழ்வு இன்று (புதன்கிழமை) கைதடியில் அமைந்துள்ள வடமாகாண முன்னாள் முதலமைச்சர் அலுவகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் கலந்து கொண்டு, அம்பியூலன்ஸ் வண்டிகளை உரிய சுகாதார வைத்திசாலை வைத்தியர்களிடம் கையளித்தார்.

இதில் மாவட்டங்களுக்காக யாழ்ப்பாணத்திற்கு 08 வண்டிகளும், கிளிநொச்சிக்கு 03 வண்டிகளும், முல்லைத்தீவிற்கு 02 வண்டிகளும், மன்னாருக்கு 03 வண்டிகளும், வவுனியாவிற்கு 01 வண்டிகளும் என ஆதார, பிரதேச மற்றும் மாவட்ட வைத்தியசாலைகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டன.

இவ் நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், சாள்ஸ் நிர்மலநாதன் வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்களப்பணிப்பாளர் வைத்தியர் கலாநிதி ஆர்.கேதீஸ்வரன், மற்றும் யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் வைத்தியர் நந்தகுமார், மற்றும் அமைச்சின் உயர்அதிகாரிகள், வைத்தியர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.