யாழ்ப்பாண நிர்வாக தொகுதிக்கான அடிக்கல் நாட்டலும் இனமாற்றமும்!

ஜாதிக ஹெலஉறுமய கட்சியின் தலைவரும், மேல் மாகாணம் மற்றும் நகர அபிவிருத்தி அமை ச்சா் பாட்லி சம்பிக்க ரணவக்க, யாழ்.மாவட்டத்திற்கு இன்று காலை விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளாா்.


இதன் போது யாழ்ப்பாண மாவட்டத்தை மையமாக கொண்டு மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி வேலைகளை பார்வையிட்டதுடன் புதிய அபிவிருத்தி பணிகளை ஆரம்பித்து வைத்திருந்தா ர். இதற்காக இன்று யாழ்ப்பாணதிற்கு விஐயம் மேற்கொண்ட அமைச்சர்.

யாழ்.புகையிரதம் நிலையம் முன்பாக ஆயிரம் மரக்கன்றுகள் நாட்டும் நிலையான திட்டத்தை ஆரம்பித்து வைத்திருந்தார். அதனைத் தொடர்ந்து யாழ் நீதி மன்ற தொகுதிக்கு முன்பாக யாழ்ப்பாண நிர்வாக தொகுதிக்கான அடிக்ல்லை நாட்டிவைத்தார்.

இதன் பின்னர் தூர சேவை பஸ் தரிப்பிடத்திற்கான அடிக்கல்லையும் நாட்டி வைத்தார்.  இந் நிகழ்வுகளில் வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன், தமித்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்,

யாழ்.மாநகர முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் உட்பட மாநகர சபை உறுப்பினர்கள் அரச அதிகாரிகள் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.