வடக்கு கிழக்கில் இடம்பெறவுள்ள போராட்டத்திற்கு செல்வம் ஆதரவு!
காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளது போராட்டத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஆதரவு தெரிவித்துள்ளார்.
ஜெனிவாவில் இலங்கை அரசாங்கத்திற்கு கால அவகாசம் வழங்கக்கூடாது என தெரிவித்து, வடக்கு கிழக்கில் எதிர்வரும் 25ஆம் திகதி, ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதுடன், கிளிநொச்சியில் பாரிய ஆர்ப்பாட்டமென்றையும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் முன்னெடுக்கவுள்ளனர்.
இந்த போராட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் தமது ஆதரவை வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், குறித்த போராட்டத்திற்கும் ஹர்த்தால் அழைப்புக்கும் தனது பூரண ஆதரவை தெரிவித்துள்ளார்.
அத்தோடு காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களது போராட்டம் நியாயபூர்வமானதுடன் அது நிறைவேற அனைவரும் ஒன்றிணைந்து ஆதரவை வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
வடக்கு கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தொடர்ச்சியாக காணாமல் போன தமது உறவுகளை கண்டு பிடித்து தரக்கோரி ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
ஐக்கிய நாடுகள் சபையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ள போதும், இலங்கை அரசாங்கம் எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் முன்னெடுக்கும் போராட்டத்திற்கு நீதி கிடைக்க வேண்டும்.
எனவே குறித்த போராட்டத்திற்கு அனைவரும் ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

.jpeg
)





கருத்துகள் இல்லை