மன்னார் புதைகுழி- கார்பன் பரிசோதனை அறிக்கை வெளிவருவதில் சிக்கல்!
மன்னார் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகளின் கார்பன் ஆய்வு அறிக்கைகளை வெளியிடுவதில் மேலும் தாமதமாகும் என்று காணாமற்போனோர் பணியகம் தெரிவித்துள்ளது.
‘5 மாதிரிகளின் பரிசோதனை நிறைவடைந்த நிலையில் 6ஆவது மாதிரியில் உள்ள காபன் பரிசோதனைக்கான மூலப்பொருள்கள் போதுமானவையாக இல்லை. அதனைச் சீர்செய்து பரிசோதனைக்குட்படுத்த அமெரிக்காவின் பீட்டா நிறுவனம் முயற்சித்துள்ளது. அதற்கு போதிய கால அவகாசம் தேவை.
அதனால் காபன் பரிசோதனை அறிக்கைகளின் முடிவை வெளியிடுவதில் கால தாமதம் ஏற்படும்’ என்று காணாமற்போனார் பணியகம் கீச்சகத்தில் தெரிவித்துள்ளது.
6 மாதிரிகள் அனுப்பப்பட்ட நிலையில் ஐந்து மாதிரிகளின் காபன் அறிக்கைகளே கிடைக்கப்பெற்றன. அவை மன்னார் நீதிவான் நீதிமன்றப் பதிவாளரிடம் சட்ட மருத்துவ நிபுணர் சமிந்த ராஜபக்சவால் கையளிக்கப்பட்டன.
எனினும் பீட்டா நிறுவனத்திலிருந்து உத்தியோகபூர்வமாக நீதிமன்றுக்கு அறிக்கை கிடைக்கப்பெறும் போதே அதன் முடிவை நீதிமன்றம் வெளியிடும் என்று நீதிவான் குறிப்பிட்டிருந்தார்.
இதேவேளை அகழ்வுப் பணியானது 149 ஆவது நாளாக நேற்று முன்னெடுக்கப்பட்டன.


.jpeg
)





கருத்துகள் இல்லை