தேசியத் தலைவருடன் மைத்திாியை ஒப்பிட்டாராம் ரணில், பிரபாகரனுக்கு அஞ்சியதுபோலவே அஞ்சுகிறாா்!!

19வது திருத்தச்சட்டத்தையும் அதன் ஊடாக உருவாக்கப்பட்ட சுயாதீன ஆணைக்குழுக்களையும் கலைப்பதற்கு நான் தயாராகவே இருக்கிறேன். ஆனால் நான் அவ்வாறு செய்தால் பிரபாகரன் செ ய்தது மீண்டும் நாட்டில் நடக்கும், சிங்கள பிரபாகரனுடன் இணைந்து பணியாற்ற முடியாது.


மேற்கண்டவாறு பிரதமா் ரணில் விக்கிரம சிங்க கூறியுள்ளாா்.  திரு­கோ­ண­ம­லைக்கு நேற்­றுப் பய­ணம் மேற்­கொண்ட தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க பல்­வேறு நிகழ்­வு­க­ளில் பங்­ கேற்­றி­ருந்­தார். அங்கு உரை­யாற்­று­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு கூறி­யுள்­ளார்.

அர­ச­மைப்­புப் பேரவை தொடர்­பில் அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன தொடர்ச்­சி­யாக பல்­ வேறு குற்­றச்­சாட்­டுக்­க­ளைச் சுமத்தி வரு­கின்­றார். இதற்­குப் பதி­லடி கொடுக்­கும் வகை­யில் ரணி ல் விக்­கி­ர­ம­சிங்க கருத்­துத் தெரி­வித்­துள்­ளார்.

’19ஆவது திருத்­தச் சட்­டத்தை கொண்டு வந்து ஜன­நா­ய­கத்தை நிலை­நாட்­டி­னோம். சுயா­தீ­னக் குழுக்­களை உரு­வாக்­கி­னோம். தங்­க­ளு­டைய சுய அர­சி­யல் லாபத்­துக்­காக அதனை விமர்­சிக்­ கின்­ற­னர். 2015ஆம் ஆண்டு நாட்டை இருண்ட யுகத்­தி­லி­ருந்து மீட்­டெ­டுத்­தோம்.

அத­னைக் குலைக்க இப்­போது பலர் கிளம்­பி­யுள்­ளார்­கள். நான் 19ஆவது திருத்­தச் சட்­டத்­தை­யும், அதன் ஊடாக உரு­வாக்­கப்­பட்ட சுயா­தீன ஆணைக்­கு­ழுக்­க­ளை­யும் கலைக்­கத் தயா­ராக இருக்­ கின்­றேன். அப்­ப­டிச் செய்­தால் நாட்­டில் என்ன நடக்­கும் என்று எண்­ணிப் பாருங்­கள்.

வடக்­கில் பிர­பா­க­ரன் ஆயு­தத்தை வைத்து என்ன செய்­தாரோ அதுவே நாட்­டில் நடக்­கும். எங்­க­ ளுக்கு சிங்­கள பிர­பா­க­ர­னு­டன் இணைந்து பணி­யாற்­ற­வேண்­டிய அவ­சி­ய­மில்லை’ என்று ரணில் குறிப்­பிட்­டார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.