சத்தியராஜ் மகளின் உன்னத கனவு நனவானது!!

பிரபல நடிகர் சத்தியராஜ்ஜின் மகள் திவ்யா தென்னிந்தியாவில் பிரபல ஊட்டச்சத்து நிபுணர் என்பதுடன், இலாப நோக்கமற்ற உலகப் புகழ் தொண்டு நிறுவனமான அக்சயா பாத்ராவின் தூதுவராகவும் உள்ளார்.

இந்நிலையில் திவ்யா, கல்வி அமைச்சர் செங்கோட்டையனை சந்தித்து தமிழ்நாட்டின் அரச பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான காலை உணவு வழங்க அரசாங்கம் உதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அவரது கோரிக்கையை பரிசீலித்த அமைச்சர் அதற்கு அனுமதியும் வழங்கினார்.

இதையடுத்து அக்சய பாத்ரா தொண்டு நிறுவனமும், சென்னை மாநகராட்சியும் இணைந்து இன்று முதல் பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு வழங்க ஆரம்பித்துள்ளன.

இதன் தொடக்க விழாவை இன்று சென்னை திருவான்மீயூர் அரச பள்ளியில் ஆளுநர் தொடங்கி வைத்தார்.

பொதுவாக அனைவருக்கும் காலை உணவு என்பது மிகவும் முக்கியமானது, குறிப்பாக குழந்தைகளுக்கு காலை உணவு ஆரோக்கியமானதாக இருந்தால்தான் அன்றைய நாள் முழுவதும் அவர்கள் சுறுசுறுப்பாக இயங்க முடியும்.

எனவே குழந்தைகளின் ஆரோக்கியத்தை கனவாக்கி சேவைசெய்யும் திவ்யாவின் கனவு இன்று நிறைவேறியுள்ளது.
 #Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.