ஐரோப்பிய ஒன்றிய-அரபு லீக் முதலாவது உச்சி மாநாடு பெரும் வெற்றி!!

நேற்று இடம்பெற்ற முதல் ஐரோப்பிய ஒன்றிய மற்றும் அரபு லீக் உச்சிமாநாடு வெற்றிகரமாக அமைந்துள்ளதென இரு தரப்பு தலைவர்களும் தெரிவித்துள்ளனர்.

முதல் உச்சிமாநாட்டின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் உச்சிமாநாட்டை பிரஸ்ஸல்ஸில் 2022 இல் நடத்துவதற்கு ஐரோப்பிய கவுன்சில் தலைவர் டொனால்ட் ரஸ்க் மற்றும் எகிப்திய ஜனாதிபதி அப்தெல் ஃபத்தா அல் சிசி ஆகியோர் உடன்பட்டுள்ளனர்.

ஷார்ம் எல்-ஷேய்க்கில் உள்ள செங்கடல் வளாகத்தில் இடம்பெறும் இரு நாள் கொண்ட இம்மாநாடு, குடியேற்றம், பாதுகாப்பு மற்றும் காலநிலை மாற்றம் உட்பட மூலோபாய முன்னுரிமைகள் பகிர்தல் விடயங்களில் ஒத்துழைத்து செயற்படுவதற்கான ஆரம்பத்தை ஏற்படுத்தியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஏமன், சிரியா மற்றும் லிபியா உட்பட பிராந்திய நெருக்கடிகளுக்கு உள்ளாகும் நாடுகளின் பொதுவான தளம் ஒன்றுக்காகவும் இதன் போது குரல் கொடுக்கப்பட்டிருந்தது.

 #Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.