போராட்டத்தைக் கலைக்க பொலிஸார் கண்ணீர் புகைப் பிரயோகம்!!

தேசிய உயர் டிப்ளோமா கற்கைநெறி மாணவர்களின் ஆர்ப்பாட்டப் பேரணியை கலைப்பதற்காக பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர் புகைத் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.


பேரணி காரணமாக மூடப்பட்டிருந்த லோட்டஸ் சுற்றுவட்டத்தினுடாக மாணவர்கள் செல்ல முற்பட்ட போதே பொலிஸார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

மகாபொல தவணையை 5 ஆயிரம் ரூபாயாக அதிகரித்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து தேசிய உயர் டிப்ளோமா கற்கைநெறி மாணவர்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டப் பேரணி புஞ்சி பொரளையில் ஆரம்பித்திருந்த நிலையில் மருதானை, தொழில்நுட்ப சந்தியை அண்மித்த பகுதிகளில் இன்று பிற்பகல் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.