நன்றாக அரசியல் செய்கிறார் விக்னேஸ்வரன்-சித்தார்த்தன்
தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பை உடைக்கக் கூடாது என்பதற்காகவே, கூட்டமைப்பில் உள்ள கட்சிகள் எம்மோடு இணைய முன்வந்தபோதும் அதனை
நான் ஏற்கவில்லை என்று புளொட் அமைப்பின் தலைவரும், கூட்டமைப்பின் பங்காளிக் கட்சித் தலைவருமான சித்தார்த்தனைச் சுட்டிக்காட்டி முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ் வரன் தெரிவித்திருந்தார்.
அவரது கட்சியில் இணைவது தொடர்பில் எந்தப் பேச்சும் நடத்தவில்லை என்று குறிப்பிட்ட த.சித்தார்த்தன், அவரும் நன்றாக அரசியல் படித்துவிட்டார் – என்றார்.
ஈ.பி.ஆர்.எல்.எவ். அமைப்பின் மாநாடு வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று இடம்பெற்றது. முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்ட முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நிகழ்வில் சிறப்புரையாற்றினார்.
அவர் தனது உரையில்:
‘‘நாம் புதிதாகத் தொடங்கிய தமிழ் மக்கள் கூட்டணி என்ற அரசியல் கட்சியுடன் இணைந்து செயற்படுவதற்கு வேறு சில கட்சிகளின் உறுப்பினர்கள் தமது சம்மதத்தைத் தெரிவித்த போதும் அந்தக் கட்சிகள் தொடர்ந்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அங்கத்துவக் கட்சிகளாக விளங்குகின்ற காரணத்தால் அவர்களின் கோரிக்கையை நான் மனவருத்தத்துடன் ஆனால் முழுமையாகவே நிராகரித்து விட்டேன். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்டமைப்பை நான் எக்காலத்திலும் சிதறடிக்கச் செய்ய மாட்டேன் என்ற எனது அப்போதைய உறுதி மொழிக்கமைவாகவே நான் அவர்களின் கோரிக்கையை மிகவும் இறுகிய கல்நெஞ்சக்காரனாக என்னை மாற்றிக் கொண்டு நிராகரித்திருந்தேன்.
இன்றைய கூட்டத்துக்கு புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன் கலந்து கொண்டுளளார். அவருக்கும் இது தெரிந்திருக்கும் என்று சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் சித்தார்த்தனிடம் கேட்டபோது, முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நன்றாக அரசியல் படித்துவிட்டார். கூட்டமைப்பில் இருக்கும் வரையில் நாம் வேறு எந்தவொரு அரசியல் கட்சியுடனும் இணையமாட்டோம். விக்னேஸ்வரன் தொடங்கிய கட்சியில் நானோ அல்லது எனது கட்சியினரோ இணைவது தொடர்பில் எந்தப் பேச்சிலும் ஈடுபட்டதே கிடையாது – என்றார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #colombo.
நான் ஏற்கவில்லை என்று புளொட் அமைப்பின் தலைவரும், கூட்டமைப்பின் பங்காளிக் கட்சித் தலைவருமான சித்தார்த்தனைச் சுட்டிக்காட்டி முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ் வரன் தெரிவித்திருந்தார்.
அவரது கட்சியில் இணைவது தொடர்பில் எந்தப் பேச்சும் நடத்தவில்லை என்று குறிப்பிட்ட த.சித்தார்த்தன், அவரும் நன்றாக அரசியல் படித்துவிட்டார் – என்றார்.
ஈ.பி.ஆர்.எல்.எவ். அமைப்பின் மாநாடு வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று இடம்பெற்றது. முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்ட முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நிகழ்வில் சிறப்புரையாற்றினார்.
அவர் தனது உரையில்:
‘‘நாம் புதிதாகத் தொடங்கிய தமிழ் மக்கள் கூட்டணி என்ற அரசியல் கட்சியுடன் இணைந்து செயற்படுவதற்கு வேறு சில கட்சிகளின் உறுப்பினர்கள் தமது சம்மதத்தைத் தெரிவித்த போதும் அந்தக் கட்சிகள் தொடர்ந்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அங்கத்துவக் கட்சிகளாக விளங்குகின்ற காரணத்தால் அவர்களின் கோரிக்கையை நான் மனவருத்தத்துடன் ஆனால் முழுமையாகவே நிராகரித்து விட்டேன். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்டமைப்பை நான் எக்காலத்திலும் சிதறடிக்கச் செய்ய மாட்டேன் என்ற எனது அப்போதைய உறுதி மொழிக்கமைவாகவே நான் அவர்களின் கோரிக்கையை மிகவும் இறுகிய கல்நெஞ்சக்காரனாக என்னை மாற்றிக் கொண்டு நிராகரித்திருந்தேன்.
இன்றைய கூட்டத்துக்கு புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன் கலந்து கொண்டுளளார். அவருக்கும் இது தெரிந்திருக்கும் என்று சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் சித்தார்த்தனிடம் கேட்டபோது, முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நன்றாக அரசியல் படித்துவிட்டார். கூட்டமைப்பில் இருக்கும் வரையில் நாம் வேறு எந்தவொரு அரசியல் கட்சியுடனும் இணையமாட்டோம். விக்னேஸ்வரன் தொடங்கிய கட்சியில் நானோ அல்லது எனது கட்சியினரோ இணைவது தொடர்பில் எந்தப் பேச்சிலும் ஈடுபட்டதே கிடையாது – என்றார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #colombo.
கருத்துகள் இல்லை