இந்நாடு இரண்டு துண்டுகளாகப் பிரிவதற்கு இலங்கை அரசு எம்மைத் தூண்டுகிறது!

இந்நாடு இரண்டு துண்டுகளாகப் பிரிவதற்கு இலங்கை அரசு எம்மைத் தூண்டுகிறது என வடக்கு மாகாண சபையின் முன்னாள்  உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.



அத்தோடு, தமிழர்களின் விடயத்தில் அரசாங்கத்திற்கு இதற்கு மேலும் கால நீடிப்பு வழங்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு கிளிநொச்சி கந்தசாமி ஆலயத்திற்கு முன்பாக போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்

இங்கு மேலும் தெரிவித்த அவர், “சிங்களவர்களுக்கு மாத்திரமே இன்று சுதந்திர தினம். தமிழர்களுக்கு துக்க தினமாகும். அரசியல் கைதிகளுக்கு விடுதலை கிடைக்கவில்லை, காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பாக எந்தவித தீர்வும் எட்டப்படவில்லை, இராணுவத்தினரால் அபகரிக்கப்பட்ட மக்களின் நிலங்கள் முழுதாக விடுவிக்கப்படவில்லை. இதன் காரணமாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கை அரசை நிறுத்த வேண்டும்” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.